உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 19, 2010

கடலூர் மாவட்ட பந்த் -90% :பொதுமக்கள் அவதி

              என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் அறிவித்த பந்த் 90% நடந்து வருகிறது. என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 19ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

                இவர்களுக்கு ஆதரவாகவும், இப்பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தியும் அதிமுக, பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இன்று கடலூர் மாவட்டத்தில் பந்த் அறிவித்துள்ளன. 

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன்,  

                         நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

                 இந்த தொழிலாளர்களின் போராட்டத்திற்கு இன்று பொது வேலை நிறுத்தம் செய்து ஆதரவு தெரிவிக்க பெரும்பாலான அரசியல் கட்சிகள் முன் வந்துள்ளன. தொழிலாளர் அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதையடுத்து, இந்தப்பொது வேலை நிறுத்தத்தின் போது கடையடைப்பு செய்து ஆதரவு தருவது என்று எமது பேரவை முடிவு எடுத்துள்ளது’’ என்று அறிவித்தார்.

               இதையடுத்து இன்று எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள பந்த் போராட்டத்தையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, பென்னாடம் , பன்ரூட்டி, நெல்லிக்குப்பம், கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. விருத்தாசலம் அதிமுக முன்னாள் நகர செயலாளர் அருளழகன் தனது ஆதரவாளர்களுடன் திறந்திருந்த கடைகளை மூடச்சொல்லி தகராறு செய்தார்.  போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்து தகராறு செய்தவர்களை களைத்தனர்.

                 போலீஸ் பாதுகாப்புடன் அவ்வப்போது அரசு பேருந்துகள் இயங்குகின்றன.  இதனால் குறித்த நேரத்திற்கு குறித்த இடத்திற்கு செல்ல முடியாமல் ஊழியர்களும், பொதுமக்களூம் அவதிப்படுகின்றனர். 90% கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.  90% பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior