உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 19, 2010

பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்வதில் அலட்சியம் : கடலூர் மாவட்டத்தில் சுற்றுச் சூழல் பாதிக்கும் அபாயம்


நெல்லிக்குப்பம் : 

                 பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடை செய்வதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால் மாவட்டத்தில் சுற்றுச் சூழல் பாதித்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பொருட்கள் வாங்க கடைக்குச் செல் லும் போது  துணிப்பை கொண்டு செல்வது வழக் கம். ஒவ்வொரு வீட்டிலும் காய்கறி வாங்குவதற்னெ தனி துணிப் பையும், மீன் மற்றும் இறைச்சி வாங்குவதற்கு ஓலையால் பின்னப்பட்ட "பரி'யும் வைத்திருப்பார்கள். மளிகை பொருட்களுக்கு 200 கிராம் முதல் 5 கிலோ வரை பேப்பர் கவர் பயன்படுத்தப்பட்டது. 

                  இவ்வாறு பயன்படுத்திய பேப்பர், பை உள் ளிட்ட குப்பைகள் மக்கி உரமானது. இதை வாங்க விவசாயிகளிடையே போட்டி நிலவியதால் நகராட்சிக்கும் வருமானம் கிடைத்தது. கால்நடைகள் வைத்திருப்பவர்களிடமும் விவசாயிகள் எரு வாங்குவார்கள். இயற்கை உரங் களை பயன்படுத்தியதால் மண் வளம் பாதுகாக்கப் பட்டு குறைந்த செலவில் அதிக மகசூல் கிடைத்தது. இதை கெடுக்க வந்ததுதான் "கேரி பேக்' (பிளாஸ் டிக் பைகள்) கலாசாரம். எண்ணெய் பாக்கெட் முதல் "டிஸ்போசல் கப்' வரை பிளாஸ்டிக் ஆதிக்கம் நிலவி வருகிறது. இதன் காரணமாக தற்போது 100 மி.லி., எண்ணெய் வாங்கினால் கூட பிளாஸ்டிக் கவரில் கொடுக்கப்படுகிறது. எங்கு பார்த்தாலும் பிளாஸ் டிக் பைகளே காணப்படுகிறது.

                      இவ்வாறு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்குவதில்லை. மண் துகள்களை அடைத்துக் கொள்வதால் மழை நீர் நிலத்தடிக்கு செல்ல முடியாததால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதோடு புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. நகராட்சி பகுதியில் சேரும் குப்பையில் பெரும் பகுதி பிளாஸ்டிக் பைகள் நிறைந்துள்ளதால் அவைகள் உரமாவது இல்லை. சேகரிக்கும் குப் பைகளை அங்காங்கே குவித்து தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது. பிளாஸ்டிக் பைகள் அதிகளவு குப்பையுடன் கலந்து வருவதால் ஒரு கோடி ரூபாய் செலவு செய்து கொண்டு வரப் பட்ட குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத் தையும் செயல்படுத்த முடியவில்லை.
 
                        இயற்கை உரங்கள் கிடைக்காமல் அதிகளவு ரசாயன உரங்களை விவசாயிகள் பயன்படுத்துவதால் மண் வளம் பாதித்து மகசூல் குறைகிறது. உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பு கூட்டங்கள் நடத்தி, தங்கள் பகுதியில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றின. ஒரு சில உள்ளாட்சி அமைப்பு நிர் வாகிகள் மற் றும் அதிகாரிகள் தங்கள் பகுதி வியாபாரிகளை அழைத்து பிளாஸ்டிக் பைகளை பயன் பாட்டை தவிர்க்க வேண்டுகோள் விடுத்தனர். 

                       ஆனால் அதிகாரிகள் முறையாக கண்காணிக்காததால் வியாபாரிகள் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகின்றனர். கூட்டம் நடத்தி நாளிதழில் செய்தி வந்தவுடன் உயர் அதிகாரிகளிடம் காட்டுவதோடு தங்கள் பணி முடிந்ததாக அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். இதே நிலை நீடித்தால் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு விவசாய நிலங்களும் பயிர் செய்ய தகுதியில்லாமல் மாறும் நிலை ஏற்படும்.  இப்பிரச்னையை தீர்க்க பிளாஸ்டிக் உற்பத்தியை தடை செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பைகள் உபயோகித்தால் அபராதம் விதித்தால் மட்டுமே சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior