உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 01, 2010

பரங்கிப்பேட்டையில் மின்னணு தகவல் பலகை குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

பரங்கிப்பேட்டை : 

                பரங்கிப்பேட்டையில் மின்னணு தகவல் பலகை குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய தேசிய கடல் தகவல்கள் சேவை மையம் இணைந்து கடல் தகவல்கள் சேவைகளை மீனவர்களுக்கு அளித்து வருகிறது. 

                   கடலூர் மாவட்டத்தில் சாமியார்பேட்டை, பரங்கிப் பேட்டை, மற்றும் முடசல் ஓடை ஆகிய மீனவ கிராமங்களில் இந்திய தேசிய கடல் தகவல்கள் அளிக்கக் கூடிய மின்னணு தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது. மின்னணு தகவல் பலகை மூலம் கிடைக் ககூடிய தகவல் குறித்து நேற்று பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்களுக்கு டாடா சமுதாய கூடத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

                      பரங்கிப்பேட்டை பேரூராட்சி துணைத்தலைவர் செழியன் தலைமை தாங்கினார். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் திட்ட அலுவலர் இளங்கோவன் வரவேற்றார். திட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்விழி திட்டம் பற்றி விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் சரவணக்குமார், கோபாலகிருஷ்ணன், வீரராஜ், கிராம தலைவர் பரமசிவம் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior