உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 01, 2010

சிதம்பரத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

சிதம்பரம்:

                தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சிதம்பரம் நகரப் போக்குவரத்து காவல்துறை, சுப்ரீம் அரிமா சங்கம் ஆகியன இணைந்து பொதுமக்களுக்கு போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை சனிக்கிழமை வழங்கியது. 

                    இந்நிகழ்ச்சியை சிதம்பரம் மேலரத வீதியில் டிஎஸ்பி ச.சிவநேசன் முதல் துண்டுப்பிரசுரத்தை வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், இன்ஸ்பெக்டர்கள் எஸ்.கார்த்திகேயன் (சட்டம்-ஒழுங்கு), எம்.கண்ணபிரான் (போக்குவரத்து), சப்-இன்ஸ்பெக்டர்கள் மதிவாணன், ஆனந்தஜோதி, சுப்ரீம் அரிமா சங்கத் தலைவர் கே.நடராஜன், மாவட்டத் தலைவர் வெங்கடசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior