உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 06, 2010

பரங்கிப்பேட்டையில் வண்ண மீன்கள் உற்பத்தி குறித்து ஆராய்ச்சி குறுந்தகடு வெளியீடு

பரங்கிப்பேட்டை : 

              லட்சத்தீவில் கடல் வண்ண மீன்கள் உற்பத்தி செய்வது குறித்த ஆராய்ச்சி செய்த திட்ட முடிவுக்கான புத்தகம், குறுந்தகடு கேரளாவில் வெளியிடப்பட்டது.

              பரங்கிப்பேட்டையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் உள்ளது. லட்சத் தீவில் கடல் வண்ண மீன்கள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டு அதற்கான திட்ட முடிவு புத்தகமாகவும், குறுந்தகடாகவும் தயார் செய்யப்பட்டது.குறுந்தகடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் அஜீத்குமார் தயார் செய்தார். 

                அதற்கான வெளியீட்டு விழா கேரள மாநிலம் கொச்சினில் நடந்தது. குறுந்தகடை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சக செயலாளர் சைலேஷ் நாயக் வெளியிட்டார். நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கடல் வாழ் உயிரின ஆராய்ச்சி மைய புல முதல்வர் பாலசுப்ரமணியன் மற்றும் கடல் அறிவியல் விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior