உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 06, 2010

கடலூர் சேவை இல்ல வளாகத்தில் தேங்கும் மழைநீரால் நோய் அபாயம்

கடலூர்:

               கடலூர் சேவை இல்ல வளாகத்தில் மழைநீர் தேங்குவதால் அங்கு தங்கியுள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

               மாவட்டத்தில்  கடந்த நவம்பர் 22 தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 26ம் தேதி கன மழை பெய்யத் தொடங்கியதால் கடலூர் நகரில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கடலூர் நகரில் 50க்கும் மேற்பட்ட நகர் பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது.  கடலூர் - நெல்லிக்குப்பம் ரோட்டில் உள்ள அரசு சேவை இல்லம் வளாகத்தில் அன்னை சத்யா அரசு காப்பகம் உள்ளது. இங்கு ”னாமியால்பாதிக்கப்பட்டு தாய் , தந்தையர்களை இழந்த 300க்கும்÷  மற்பட்ட ஆதரவற்ற சிறுமிகள் தங்கியுள்ளனர்.

          மேலும் இவ்வளாகத்தில் சமூக நலத்துறை அலுவலகமும் உள்ளது.கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் இவ்வளாகத்தில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. சேவை இல்லத்திலிருந்து கழிவு நீர் பின்புறம் உள்ள கெடிலம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது கெடிலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இங்கு தேங்கியுள்ள மழை நீர் வடிய வழியில்லாமல் கடந்த ஒரு வாரமாக  சாக்கடை போல் காணப்படுகிறது.இதனால் இங்குள்ள சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. தேங்கிய நீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior