உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 09, 2011

நெய்வேலியில் தரமில்லாமல் போடப்படும் சிறப்புச் சாலைகள்?

நெய்வேலி:
 
              நெய்வேலியை அடுத்த கெங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகரில் சாலை போடுவதற்கான எவ்வித வரையறைகளையும் பின்பற்றாமல், தரம் குறைந்த சாலைகள் அமைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

             நெய்வேலியை அடுத்த கெங்கைகொண்டான் பேரூராட்சிக்குட்பட்ட பாலாஜி நகரில் 12-வது தெருவில், மாநில சிறப்புச் சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.இந்த சாலையை புவனகிரியைச் சேர்ந்த, ஒப்பந்ததாரர் ஒருவர் டென்டர் எடுத்து செய்து வருகிறார். 

               சாலை அமைப்பதற்காக நெடுஞ்சாலைத் துறை பரிந்துரை செய்துள்ள எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் தரமற்ற சாலைகள் போடுப்படுவதாகவும், சாலை போடுவதற்கு முன் அப்பகுதியில் அடித்தளத்தில் மணல் நிரப்பி, அதன் மீது கருங்கல் ஜல்லிகளுடன் சிமென்ட் கலந்தும், சாலையின் விளிம்புப் பகுதியில் கனமான கான்கிரீட்டாலான சிறிய தடுப்புச் சுவர் எழுப்பி அதன்பின்னர் சாலை அமைக்க வேண்டும் என சாலை அமைப்பதற்கான விதிமுறைகள் உள்ள நிலையில், அந்த விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல், இருபுறமும் செங்கற்களை அடுக்கி, மணலுக்குப் பதிலாக களிமண்ணை நிரப்பி அதன்மீது கலவை கொட்டப்பட்டு சாலை அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

            மேலும் சாலையின் இருபுறமும் வடிகால் வசதி ஏற்படுத்தாமல் சாலை அமைக்கப்படுவதால், மழைக்காலத்தில் மழைநீர் வீடுகளில் புகும் நிலை ஏற்படும் என மூத்தக் குடிமக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.மேலும் சாலையின் மேற்பரப்பில் போடப்படும் கான்கிரீட்டின் மொத்த கனஅளவும், நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் குறைவாக போடப்படுவதாகவும், 

இதுகுறித்து சிறப்புச் சாலைகள் திட்ட ஆய்வாளர் கூறியது 

                 அவர் இதுவரை சாலை அமைப்புப் பணிகளை பார்வையிடவும் வரவில்லை என்கின்றனர் குடியிருப்புவாசிகள்.

தரமில்லாத சாலைகள் போடுவது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கே.குப்புசாமியை கூறியது  

              "அவர் தனக்கு அண்ணாமலை நகர், கெங்கைகொண்டான், பெண்ணாடம் பேரூராட்சிகளின் பொறுப்பு செயல் அலுவலராக இருப்பதால் பிறகு பதில் சொல்கிறேன்' என்று கூறினார். மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காக போடப்படும் சாலைகள் தரமானதாகவும், முறையாகவும் அமைந்தால் தானே அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் மீண்டும் அவர்கள் முகத்தில் விழிக்க முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior