உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 10, 2011

கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி மாணவர் ஆதித்யன் 1175 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம்

கடலூர் : 

                 கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி மாணவர் ஆதித்யன் 1175 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். 

               கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 294 பேர் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வு எழுதினர். இவர்களில் 291 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 

                இப்பள்ளியில் மாணவர் ஆதித்யன் 1175 மதிப்பெண் பெற்று முதலிடமும், மாணவிகள் சுகன்யா 1167, பிரீத்தி 1166 மதிப்பெண் பெற்று முறையே இரண்டு மற்றும் மூன்றாமிடங்களை பிடித்தனர். 

            மாணவர் இந்திரஜித், மாணவிகள் ஜெயதுர்கா, ஜனனி, கிருத்திகா, சுகன்யா ஆகியோர் கணிதம் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் பெற்றனர். மாணவர் சித்தார்த்தன் கணக்குப் பதிவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் பெற்றார். 1150 மதிப்பெண்ணுக்கு மேல் 5 பேரும், 1100க்கு மேல் 27 பேர், 1050க்கு மேல் 45 பேர், 1000த்திற்கு மேல் 101 பேர் மதிப்பெண் பெற்றனர். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளர் ராஜேந்திரன், நிர்வாக அதிகாரி சிரீஷா கண்ணன் ஆகியோர் பாராட்டினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior