உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 10, 2011

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் மாணவிகளே சாதனை

 கடலூர் : 

                மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 26,204 மாணவ, மாணவிகளில் 40 பேர் அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளனர். 

             பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்டத்தில் 165 பள்ளிகளில் இருந்து 26,204 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களில் 21,394 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
                
                 கடலூர் கல்வி மாவட்டத்தில் 8,452 மாணவர்கள், 10,362 மாணவிகள் என மொத்தம் 18,814பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 6,640 மாணவர்கள், 8,882 மாணவிகள் என மொத்தம் 15,522 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்கள் 78.56 சதவீதமும், மாணவிகள் 85.71 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

               விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் மாணவிகளின் தேர்ச்சி சதவீதத்தை விட மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. 3,877 மாணவர்கள், 3,513 மாணவிகள் என மொத்தம் 7,390 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 3,140 மாணவர்கள், 2,732 மாணவிகள் என மொத்தம் 5,872 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 77.76 சதவீதமும், மாணவர்கள் 80.99 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகளை விட மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிக மதிப்பெண்: 

                        நெய்வேலி ஜவகர் மெட்ரிக் பள்ளி மாணவர் ரேவந்த், நெய்வேலி குளூனி பள்ளி மாணவி கங்கா ஆகியோர் 1,182, நெய்வேலி குளூனி பள்ளி மாணவி சுவாதி 1,181, அதே பள்ளியை சேர்ந்த மாணவிகள் கிருத்திகா, நந்தினி ஆகியோர் 1,180 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களிலும், தனியார் பள்ளிகளில் மாவட்டத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

கல்வி மாவட்டம்: 

                 கடலூர் கல்வி மாவட்டத்தில் நெய்வேலி குளூனி பள்ளி மாணவி நந்தினி 1180, சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி மாணவர் முனீஸ்வரன் 1,177, நெய்வேலி குளூனி பள்ளி மாணவி செரின் சல்மா, சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவர் பார்த்திபன் 1174 மதிப்பெண் பெற்று மாவட்டம் மற்றும் கல்வி மாவட்டத்தில் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 

                விருத்தாசலம் பாத்திமா மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் அசோக்குமார் 1,159, அந்தோபாஸ்டின் 1,156, எறையூர் அருணா மேல்நிலைப் பள்ளி மாணவர் அமுதன் 1,153 மதிப்பெண் பெற்று விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். 

அரசு பள்ளியில் முதலிடம்: 

              அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிதம்பரம், அபிராமி 1,137, கடலூர் துறைமுகம் பிரியா 1,134, புதுப்பேட்டை கோமதி 1,125 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவிலும், கடலூர் கல்வி மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். நல்லூர் மாணவர் விஜயகுமார் 1,101, காட்டுமன்னார்கோவில் காவேரி 1,087, நல்லூர் கொளஞ்சிநாதன் 1,083 மதிப்பெண் பெற்று விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.

நிதி உதவி பெறும் பள்ளிகளில் முதலிடம்: 

              கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ராஜபிரியா 1,157, நஸ்ரீன் பானு, 1,154, கலைவாணி 1,153 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவிலும், கடலூர் கல்வி மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். எறையூர் அருணா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அமுதன் 1,153, சவுந்தர்யா 1,151, காட்டுமன்னார்கோவில் பி.ஆர்.ஜி., பள்ளி முத்து 1,139 மதிப்பெண் பெற்று விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். 

40 பேர் வாஷ் அவுட்: 

         மாவட்டத்தில் 12,329 மாணவர்கள், 13, 875 மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 9780 மாணவர்கள், 11,614 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2549 மாணவர்கள், 2261 மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர். அதில் 2135 பேர் ஒரு பாடத்திலும், 1504 பேர் இரண்டு பாடத்திலும், 750 பேர் மூன்று பாடத்திலும், 289 பேர் நான்கு பாடத்திலும், 93 பேர் ஐந்து பாடத்திலும், 6 பாடத்தில் 40 பேர் தோல்வி அடைந்துள்ளனர். 

தோல்வியில் மாணவர்கள் அதிகம்: 

              தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை மாணவிகளைவிட 1546 குறைவாக இருந்தது. ஆனால், தோல்வி அடைந்தவர்களில் பெண்களை விட மாணவர்கள் 288 பேர் அதிகமாக உள்ளனர். 

செஞ்சுரியில் சாதனை: 

                ஒரு பாடத்தில் 99 பேரும், இரண்டு பாடங்களில் 39 பேரும், மூன்று பாடத்தில் ஒரு மாணவர் நூறுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior