உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 10, 2011

மேல்பட்டாம்பாக்கம் கிறிஸ்தவ பள்ளி மாணவி சிறப்புத் தமிழ் பாடத்தில் மாநில அளவில் இரண்டாமிடம்

நெல்லிக்குப்பம் : 

           மேல்பட்டாம்பாக்கம் கிறிஸ்தவ பள்ளி மாணவி சிறப்புத் தமிழ் பாடத்தில் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

                 பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பெண்கள் கிறிஸ்தவ மேல் நிலைப்பள்ளி மாணவி பிரியங்கா சிறப்புத் தமிழ் பாடத்தில் 184 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார். 

பாட வாரியாக அவர் பெற்ற மதிப்பெண் விவரம்:

தமிழ் 143, 
ஆங்கிலம் 123, 
புவியியல் 145, 
வரலாறு 136,
பொருளியல் 153, 
சிறப்பு தமிழ் 184.

மாணவி பிரியங்கா கூறுகையில்," 

                  மாநிலத்தில் இரண்டாமிடம் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. பள்ளிக்கு நல்ல பெயரை வாங்கித் தந்துள்ளேன். தமிழாசிரியர் தனிகவனம் செலுத்தி பாடம் நடத்தியதால் ஆர்வமுடன் படித்து வெற்றி பெற்றேன். தலைமையாசிரியர், பெற்றோர், தோழிகள் ஆதரவால் வெற்றி பெற முடிந்தது' என்றார். மாணவி பிரியங்காவை தலைமையாசிரியை விமலாகிறிஸ்டி, தமிழாசிரியர் ஒப்பிலாமணி பாராட்டினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior