உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 10, 2011

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவர் பார்த்திபன் மூன்றாம் இடம்

கடலூர் : 

                
              ""டாக்டருக்கு படிப்பதே என் விருப்பம்'' என பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்த சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவர் பார்த்திபன் கூறினார். கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவர் 1,174 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை பெற்றார். 

 மதிப்பெண்   விபரம் 

தமிழ் 189, 
ஆங்கிலம் 191, 
இயற்பியல் 198, 
வேதியியல் 197, 
உயிரியல் 200, 
கணிதம் 199. 

                 எனது தந்தை பழனிவேல் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். நான் எல்.கே.ஜி., முதல் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்று வந்தேன். 10ம் வகுப்பில் 450 மதிப்பெண் பெற்றேன். தற்போது பிளஸ் 2 தேர்வில் 1,174 மதிப்பெண் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் கஷ்டப்பட்டு படித்ததற்கு பலன் கிடைத்துள்ளது. என் தாயும், தந்தையும் ஊக்கமளித்தது பெரும் உதவியாக இருந்தது. டாக்டருக்கு படிக்க விரும்புகிறேன், என பெற்றோரின் ஆசையும் அதுதான். இவ்வாறு மாணவர் பார்த்திபன் கூறினார்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior