உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 10, 2011

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 82 சதவீதம் தேர்ச்சி

 கடலூர் : 

              கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 4 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

             கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 12 ஆயிரத்து 329 மாணவர்களும், 13 ஆயிரத்து 875 மாணவிகள் என மொத்தம் 26 ஆயிரத்து 204 பேர் பங்கேற்றனர். அவர்களில் 9,780 மாணவர்களும், 11 ஆயிரத்து 614 மாணவிகள் என மொத்தம் 21 ஆயிரத்து 394 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் 2,549 மாணவர்களும், 2,261 மாணவிகள் என மொத்தம் 4,810 பேர் தோல்வியடைந்துள்ளனர். மாணவர்கள் 79.32 சதவீதமும், மாணவிகள் 83.7 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

               மாணவர்களை விட வழக்கமாக மாணவிளே இந்த ஆண்டும் 4 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.அதேப்போன்று மாவட்டத்தில் கடந்த ஆண்டு 78 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் இந்த ஆண்டு 82 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி புனித ஜோசப் குளுனி பள்ளி மாணவி நந்தினி 1180 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், 

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி மாணவர் முனீஸ்வரன் 1177 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தையும், 

நெய்வேலி புனித ஜோசப் குளூனி பள்ளி மாணவி செரின் சல்மா, 

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவர் பார்த்திபன் ஆகியோர் தலா 1174 மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அமுதவல்லி கூறியது:

                கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 4 சதவீதம் அதிகரித்துள்ளது. சேப்பாக்கம், தர்மநல்லூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. மாவட்ட அளவில் ஆதி திராவிடர் நலப்பள்ளிகளின் தேர்ச்சி சதவீதமும் கூடியுள்ளது. 

                விருந்தாசலம் கல்வி மாவட்டத்திலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு பின் தங்கிய பள்ளிகளை கண்டறிந்து துவக்கத்தில் இருந்தே அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

                கடலூர் கல்வி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 12 மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தன. ஆனால் இந்த ஆண்டு இரு மடங்காக உயர்ந்து 24 பள்ளிகள் தேர்ச்சி பெற்றுள்ளது. பின் தங்கிய மாணவர்களை தேர்ச்சியடையச் செய்வதற்காக முக்கிய வினாக்கள் அடங்கிய கையேடு வழங்கப்பட்டது. இந்த கையேடு மாணவர்கள் தேர்ச்சியடைய மிகவும் பயனுள் ளதாக அமைந்தது. இவ்வாறு சி.இ.ஓ., அமுதவல்லி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior