உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 10, 2011

புதுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கோமதி கடலூர் மாவட்ட அளவில் மூன்றாம் இடம்

கடலூர் : 

                   ""டாக்டருக்கு படிப்பதே எனது விருப்பம்'' என அரசு பள்ளிகளில் மூன்றாம் இடம் பிடித்த மாணவி கோமதி கூறினார்.

         பிளஸ் 2 பொதுத் தேர்வில் அரசு பள்ளியில் மாவட்ட அளவில் புதுப்பேட்டை அரசு   மேல்நிலைப் பள்ளி மாணவி கோமதி 1,125 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். 

பாட வாரியாக மதிப்பெண் விவரம்:

தமிழ் 189, 
ஆங்கிலம் 172, 
இயற்பியல் 192, 
வேதியியல் 198, 
உயிரியல் 175, 
 கணிதம் 199


              என் தந்தை கணேசன், தாய் மகேஸ்வரி ஆகியோர் நெசவு தொழில் செய்கின்றனர். நான் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 484 மதிப்பெண் பெற்றேன். பள்ளியில் முக்கிய பாடங்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தியது எனக்கு உதவியாக இருந்தது. டாக்டருக்கு படிக்க விருப்பம் உள்ளது' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior