உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 10, 2011

எலக்ட்ரிக்கல் மோட்டார் ரீ வைண்டிங் பாடப் பிரிவில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த கடலூர் மாணவர் அன்பரசன்

கடலூர் :

               "இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன்' என எலக்ட்ரிக்கல் மோட்டார் ரீ வைண்டிங் பாடப் பிரிவில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த கடலூர் மாணவர் அன்பரசன் கூறினார். 

                பிளஸ் 2 பொதுத் தேர்வில் எலக்ட்ரிக்கல் மோட்டார் ரீ வைண்டிங் பாடப் பிரிவில் 599 மதிப்பெண் பெற்று (இ.எம்.ஆர்) கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர் அன்பரசன் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். 

பாட வாரியாக அவர் பெற்ற மதிப்பெண் விவரம்: 

தமிழ் 142, 
ஆங்கிலம் 163, 
கணிதம் 170, 
எலக்ட்ரிக்கல் மோட்டார் ரீ வைண்டிங் தியரி 199, 
செய்முறை 1 மற்றும் 2ல் தலா 200. 

மாணவர் அன்பரசன் கூறுகையில், 

                 "எனது தந்தை ராஜேந்திரன் குள்ளஞ்சாவடி அடுத்த டி.பாளையம் ஊராட்சி உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். தாய் லட்சுமிகாந்தம். இருவரும் எனக்கு ஊக்கம் அளித்தனர். மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் அளித்த ஒத்துழைப்பே மூன்றாம் இடம் பிடிக்க காரணமாக அமைந்தது' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior