உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 10, 2011

சிவில் டிராப்ட்ஸ்மேன் பிரிவில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த என்.எல்.சி., பள்ளி மாணவி அனிதா

நெய்வேலி : 

                    "டிவி பார்க்கும் பழக்கம் இல்லாததால் என்னால் படிப்பில் சாதிக்க முடிந்தது' என சிவில் டிராப்ட்ஸ்மேன் பிரிவில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த என்.எல்.சி., பள்ளி மாணவி அனிதா கூறினார்.

                பிளஸ் 2 பொதுத் தேர்வில் டிராப்ட்ஸ்மேன் (சிவில்) பிரிவில் என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளி மாணவி அனிதா 596 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். 

பாட வாரியாக அவர் மதிப்பெண் விவரம்:

தமிழ் 181, 
ஆங்கிலம் 171, 
கணிதம் 183, 
தியரி 196, 
செய்முறை ஒன்று மற்றும் இரண்டில் தலா 200 மதிப்பெண். 

மாணவி அனிதா கூறுகையில்,"

                நான் 10ம் வகுப்பு தேர்வில் பள்ளி அளவில் முதல் இடத்தை பிடித்தேன். தற்போது பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.எ னது அப்பா கூலித்தொழிலாளி. தினமும் ஏதாவது வேலை கிடைத்தால் தான் உண்டு. எனது பெற்றோர் மட்டுமின்றி பள்ளி ஆசிரியர்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். எனக்கு "டிவி' பார்க்கும் பழக்கம் இல்லாததால் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடிந்தது. இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்பது எனது ஆசை' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior