உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 18, 2011

நெல்லிக்குப்பத்தில் மகளிர் பேருந்து இயக்க கலெக்டருக்கு கோரிக்கை

நெல்லிக்குப்பம் : 

         நெல்லிக்குப்பத்தில் இருந்து கடலூர் வரை பள்ளி நேரத்தில் பெண்களுக்கு தனி பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெல்லிக்குப்பம் இஸ்லாமிய ஐக்கிய மஜ்லிஸ் அமைப்பினர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:

            நெல்லிக்குப்பத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயிலவும், பொதுமக்கள் வேலைக்காகவும் கடலூர் செல்ல வேண்டியுள்ளது. காலை, மாலை நேரங்களில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் அபாயம் உள்ளது. இட நெருக்கடியில் பயணம் செய்யும் பெண்கள் ஆண்களின் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் நிலை உள்ளது. மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே, காலை, மாலை நேரங்களில் மகளிர் மட்டும் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior