உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 18, 2011

தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

திட்டக்குடி : 

        திட்டக்குடி அடுத்த தொழுதூர், டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் 12வது பட்டமளிப்பு விழா நடந்தது. ஆறுமுக முதலியார் - சொர்ணம் கல்வி அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் தொழிலதிபர் ராஜன், ராஜபிரதாபன் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பழனிசாமி வரவேற்றார்.

விழாவில் திருச்சி அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர், முனைவர் கிருஷ்ணமூர்த்தி 167 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளித்து பேசுகையில், 

            "மாணவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் முக்கியமான ஒன்று. திடமான நம்பிக்கையும், நல்நோக்கமும் வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும். பட்டமளிப்பு விழா என்பது கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் ஒருசேர நினைத்துப் பார்க்கக்கூடிய நிகழ்வு. பொறியியல் மாணவர்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்' என்றார்.

              அண்ணா பல்கலைக்கழக அளவில் கல்லூரியில் முதலிடம் பெற்ற ஸ்ரீவித்யாலட்சுமி, நிர்மலா, பத்மபிரியா, ராஜலட்சுமி ஆகியோருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டன. கல்லூரி துணைமுதல்வர் செல்வராஜ், துறைத் தலைவர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior