உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 18, 2011

கடலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு உதவித்தொகை விண்ணப்பம் வினியோகம்

கடலூர் : 

         வேலை வாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

            மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் கடந்த 1ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 300 ரூபாய், பிளஸ் 2 விற்கு 375 ரூபாய், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 450 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.

             இத்திட்டத்தில் உதவித் தொகை பெற உடல் ஊனமுற்றவர் அல்லது செவித் திறன் குறைந்தவராகவும், தங்கள் கல்வித் தகுதியை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்த, 40 வயதிற்கு (ஆதிதிராவிடர்கள் 46 வயது) உட்பட்டவராக இருக்க வேண்டும்.தகுதி உடையவர்கள் வேலை நாட்களில் கடலூரில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior