உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 08, 2011

கடலூரில் செயற்கை நகைகள் தயாரிக்கும் பயிற்சி

கடலூர்:
 

கடலூர் தி சுசான்லி குரூப்ஸ் மேலாளர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது:-

              மத்திய அரசு அமைப்பு மூலமாக கடலூர் மஞ்சக்குப்பம் தி சுசான்லி அக்கு பஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவமனையில் வருகிற 14, 15 மற்றும் 20, 21 ஆகிய 4 நாட்கள் பேன்சி நகைகள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நெக்லஸ், ஜிமிக்கி, கம்மல், வளையல், கொலுசு மற்றும் 50-க்கும் மேற்பட்ட பேன்சி நகைகள் தயாரிக்கும் முறை செயல் முறையுடன் செய்து காண்பிக்கபடும்.

            கடைகளில் சுமார் ரூ.500 மதிப்பில் வாங்கும் பேன்சி நகைகளை ரூ.100 முதல் 200 க்குள் நாம் கைப்பட தயாரிக்கலாம் இதேபோல் வீட்டில் இருக்கும் பெண்கள் நேரம் கிடைக்கும்போது இதை தயாரித்து விற்பனை செய்தாலே மாதம் கணிச மான தொகையினை சம்பாதிக்க முடியும். bஇதனால் முழுநேர தொழிலாக செய்பவர்களுக்கு மத்திய அரசின் அமைப்பு வழங்கும் இப்பயிற்சியின் மூலமாக வங்கிகளில் மானியத்துடன் கூடிய கடனுதவியை பெற்று தொழில் தொடங்கலாம். இப்பயிற்சிக்கு 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படு வார்கள். 
 
முன்பதிவு மற்றும் பயிற்சி கட்டணம் விபரங்களுக்கு 98422-43055 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். 
 
இவ்வாறு அவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior