உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 19, 2009

நவம்பர் 20ல் வடலூரில் வேலைவாய்ப்பு முகாம்

கடலூர்,நவ. 18:

தி.மு.க. சார்பில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வடலூரில் நவம்பர் 20,21,22 தேதிகளில் நடைபெறும் என்று கடலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதன்கிழமை அறிவித்தார்.
அமைச்சர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் கலைஞரின் 86-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு (18 வயது முதல் 35 வயது வரை) கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பைப் பெற்றுதரும் நோக்கில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
ஏற்கெனவே பதிவு செய்து அடையாள அட்டை பெற்று உள்ளவர்களுக்கு மட்டும் நேர்முக் தேர்வு நடைபெற இருக்கிறது. 20, 21, 22 ஆகிய தேதிகளில் வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் 300 முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்க இசைவு தந்துள்ளனர். இதுவரை இந்த நிறுவனங்கள் 52 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை அளிக்க முன்வந்துள்ளன.
இதில் காக்னிஸண்ட், இன்போசிஸ் பி.பி.ஓ. போலரிஸ் மென்பொருள் நிறுவனம், போர்டு இந்தியா, விப்ரோ, ஹுண்டாய். நோக்கியா, ரிலையன்ஸ், செயின்ட் கோபெயின், டி.வி.எஸ்., எச்.சி.எல் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் அடங்கும்.
வடலூர் வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி கலந்துகொள்கிறார். ஏற்கெனவே பதிவு அட்டை பெற்றவர்களில், நவம்பர் 20-ம் தேதி ஏ பிரிவினருக்கும், 21-ம் தேதி பி பிரிவினருக்கும், 22-ம் தேதி சி பிரிவினருக்கும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். இளைஞர்கள் கலந்துகொண்டு பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior