உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 19, 2009

ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியர்களுக்கு மருத்துவ உதவித் தொகை உயர்வு

நெய்வேலி நவ .17:

என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிறுவனம் அளித்துவரும் மருத்துவ உதவித் தொகை அதிகபட்சம் ரூ. 6 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களின் நலன்கருதி நிர்வாகம் ஊழியருக்கும், அவரது மனைவிக்கும் 1995-ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் உதவித் தொகை வழங்கி வருகிறது.
இந்தத் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என்று ஓய்வுபெற்ற ஊழியர்கள் கடந்த சில ஆண்டுகளாக நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்நிலையில் ஓய்வுபெற்ற ஊழியர்களின் நலனை பரிசீலித்த நிறுவனத் தலைவர் ஏ.ஆர்.அன்சாரி, அவர்களின் மருத்துவ உதவித்தொகையை அதிகபட்டம் ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து ரூ.3500 பெற்றுவந்த ஊழியர்களுக்கு ரூ.6000-ம், ரூ.2300 பெற்றுவந்தவர்களுக்கு ரூ.4000-ம், ரூ.1700 பெற்றுவந்தவர்களுக்கு ரூ.3000-ம், ரூ.1200 பெற்றுவந்தவர்களுக்கு ரூ.2000-ம் வழங்க நிர்வாகம் முடிவுசெய்து அதற்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
இந்த உயர்த்தப்பட்டத் தொகைககள் 2009-10-ம் நிதியாண்டைக் கணக்கிட்டு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து ஓய்வுபெற்றத் தொழிலாளர்கள் நிறுவனத்தலைவருக்கு தங்களது நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior