உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 19, 2009

கழிவுநீர் தேங்குவதால் திறக்க முடியாத பள்ளி வகுப்பறைகள்

பண்ருட்டி,நவ.18:

பண்ருட்டி அய்யனார் கோயில் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியைச் சுற்றிலும் மழைநீர் மற்றும் கழிவு நீர் தேங்கி நிற்பதால் 15 நாள்களாக பள்ளி திறக்கப்படாமல், பழைய கட்டடத்திலேயே வகுப்புகள் நடைபெறுகின்றன.
பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தின் பின் பகுதியில், அய்யனார் கோயில் தெருவில் நகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 160-ம் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் இதன் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 25 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளிகள் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதுடன், இங்கு கழிவு நீர் கால்வாய்கள் முறையாக அமைக்காததாலும், கால்வாய்களை பராமரிக்காததாலும் மழைக் காலத்தில் மழை நீர் மற்றும் கழிவு நீர் பள்ளி வளாகத்தை சூழ்ந்து மாணவர்களோ, ஆசிரியர்களோ செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
அண்மையில் பெய்த மழையால் பள்ளி வளாகம் முழுவதும் நீர் சூழ்ந்ததால், கடந்த 15 நாள்களாக முருகன் கோயில் அருகில் உள்ள பழைய வகுப்பறை கட்டடத்தில் இட நெருக்கடியில் அனைத்து மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்தில் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களும், ஆசிரியர்களும் பெரும் அவதி அடைகின்றனர். நகராட்சி அலுவலகத்தின் பின் பகுதியில் உள்ள இப்பள்ளியின் நிலை குறித்து நக ர நிர்வாகத்திடம் பல முறை எடுத்துக் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் குழந்தைகள் அதிக அளவில் படிக்கும் இப்பள்ளியை, நகர நிர்வாகம் சீரமைத்து சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான முறையில் மாணவர்கள் கல்வி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior