உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 19, 2009

நெய்வேலி நகரியத்தில் பாலிதீன் பைகளை பயன்படுத்த தடை

நெய்வேலி நவ .17:

நெய்வேலி நகரியத்தில் பாலிதீன் பைகளை பயன்படுத்த என்எல்சி நகர நிர்வாகம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது
புவிவெப்பபம் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது உலகளவில் அதிகரித்துவருகிறது. இதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுóக்க பல்வேறு நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதன் ஒருபகுதியாக மத்தியப் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நெய்வேலி நகரியத்தில் பாலிதீன் பைகளை பயன்படுத்த நகர நிர்வாகம் தடைவிதித்துள்ளது. அதன்படி கடைகளில் பொருள் வாங்குவோருக்கு பாலிதீன் பைகளில் பொருள்களைக் கொடுக்கக் கூடாது, ஓட்டல்கள், டீக் கடைகளில் பிளாஸ்டிக் டம்பளர்களை பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தியிருப்பதோடு, மீறி செயல்படுவோருக்கு அபராதமும் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து நெய்வேலி நகரியத்தில் கடந்த சில தினங்ளாக பாலிதீன் பயன்பாட்டை வணிக நிறுவனங்கள் குறைத்துள்ளன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior