உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 19, 2009

சிக்னல் விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி

பண்ருட்டி,நவ.18:

மின்சாரக் கோளாறு காரணமாக பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் உள்ள உயர்கோபுர விளக்கு, சிக்னல் புதன்கிழமை எரியாமல் இருள் சூழ்ந்து இருந்ததால் வாகன ஓட்டிகளும், பாத சாரிகளும் அவதி அடைந்தனர்.
நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர் வியாபார மற்றும் பணி நிமித்தமாக பண்ருட்டி வந்து செல்கின்றனர். இதனால் நகரின் மையப் பகுதியான நான்கு முனை சந்திப்பு எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.
மேலும் கடலூர்-சித்தூர், சென்னை-கும்பகோணம் செல்லும் நெடுஞ்சாலைகள் நான்கு முனை சந்திப்பை கடந்துதான் செல்ல வேண்டும். இதனால் இச்சந்திப்பில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன. காலை, மாலை வேளையில் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படும்.
இத்தகைய முக்கியம் வாய்ந்த நான்கு முனை சந்திப்பில் பொறுத்தப்பட்டுள்ள உயர்கோபுர விளக்கும், அண்மையில் அமைக்கப்பட்ட சிக்னலும் மின்சார கோளாறு காரணமாக புதன்கிழமை எரியவில்லை. இதனால் வாகன ஒட்டிகளும், பாதசாரிகளும் அப்பகுதியைக் கடந்து செல்ல பெரும் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் போலீஸôர் சிக்னல் இன்டிகேட்டர் இன்றி இருளில் போக்குவரத்தை சரி செய்ய படாதபாடு பட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior