உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 19, 2009

தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் விசாரணை

சிதம்பரம்,நவ.17:

கடலூர் மாவட்டத்தில் 3 கூட்டங்களுக்கு மேல் பங்கேற்காத ஊராட்சி மன்றத் துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் தவறு செய்தவர்களிடம் தமிழக தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டார்.
3 கூட்டங்களுக்கு மேலாக பங்கேற்காத துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கடலூர் மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பினார். அந்த அறிக்கையின்படி தேர்தல் அதிகாரி சந்திரசேகரை நீதிபதியாக நியமித்து விசாரணை நடத்த அரசு உத்திரவிட்டுள்ளது.
அதன்பேரில் சந்திரசேகரன் செவ்வாய்க்கிழமை சிதம்பரம் வந்தார்.
சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் பிச்சாவரம், காட்டுபரூர், சித்தேரிகுப்பம் ஆகிய ஊராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
புதன்கிழமை மங்களூர் ஒன்றியத்தைச் சேர்ந்த மங்களூர், ஆலம்பாடி, திருமுலை, வையங்குடி, நெடுங்குளம், கோடங்கு ஆகிய 6 ஊராட்சிகளில் விசாரணை மேற்கொள்கிறார்.
விசாரணை முடிவுற்று 15 தினங்களுக்குள் அரசுக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளதாக சந்திரசேகரன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior