உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 24, 2009

25 பேர் பயணிக்கும் வாகனத்தில் 48 பேர்

கடலூர் அருகே திங்கள்கிழமை பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன், 25 பேர் பணிக்கும் வசதி கொண்டதாக இருந்தும் 48 மாணவ மாணவியரை ஏற்றிச் சென்றது தெரிய வந்துள்ளது. விபத்து நிகழ்ந்த சற்று நேரத்துக்கெல்லாம், கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச் செல்வன் தனது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களுடன் அந்த வழியாக வந்தார். விபத்து பற்றி அவர் கூறியது: விபத்து நடந்த சிறிது நேரத்தில் அந்த வழியாக நாங்கள் வந்துகொண்டு இருந்தோம். வேனுக்கு அடியில் யாரும் சிக்கியிருக்கக் கூடும் என்ற எண்ணத்தில், சேற்றில் கிடந்த வேனை புரட்டிப் பார்த்தோம். உள்ளே யாரும் இல்லை. ஆனால் 25 பேர் பயணிக்கும் வசதி கொண்ட அந்த வேனில் 48 பேர் ஏற்றப்பட்டு இருந்தது மிகவும் கொடுமையானது. மேலும் அந்த வேன் மிகமிகப் பழையது. நன்றாக பெயிண்ட் அடித்து வைத்து இருந்தனர். இத்தகைய வாகனங்ளை எல்லாம் மாணவர்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்கக் கூடாது. பள்ளிப் பணிக்கு பயன்படுத்தும் வாகனங்களை எல்லாம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகளும், போலீஸôரும் சோதனை செய்ய வேண்டும். பயணிகளை ஏற்றத் தகுதி இல்லாத வாகனங்களை இயக்க அனுமதிக்கக் கூடாது. இதில் கடுமையா இருக்க வேண்டும் என்றார் தாமரைச் செல்வன். இதுகுறித்து தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச.அப்துல்மஜீது கூறுகையில், மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்து இருக்கும் சட்டத்தில் சிறப்பு அம்சம், அண்மைப் பள்ளி திட்டம் ஆகும். அந்தந்த பகுதி மாணவர்கள் அந்த்தந்த பகுதி பள்ளிகளிலேயே படிக்க வேண்டும். காமராஜர் ஆட்சிக் காலத்தில் இந்த நடைமுறை இருந்தது. இச்சட்டத்தை தமிழக அரசு உடனே அமல்படுத்த வேண்டும். இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, ஆசிரியர்கள் கடலூர் மாவட்ட உதவிக் கல்வி அலுவலகங்கள் முன் 18-ம் தேதி மக்கள் சந்திப்பு இயக்கம் மற்றும் மறியல் போராட்டம் நடத்தவர் என்றார் மஜீது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior