உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 24, 2009

எனது பேச்சைக் கேட்​டால் தமி​ழ​கத்​தில் நல்​லாட்சி

சிதம் ​ப​ரம்,​ நவ. 23:​

தேர்​தல் நேரத்​தில் எனது பேச்சை கேட்டு வாக்​க​ளித்​தால் தமி​ழ​கத்​தில் நல்​லாட்சி நடத்த முடி​யும். அனை​வ​ருக்​கும் சமூ​க​நீதி கிடைக்​கும். அனைத்து சாதி​யி​ன​ரும் நன்​றாக வாழ்​வார்​கள் என பாட்​டாளி மக்​கள் கட்சி நிறு​வ​னர் ச.ராம​தாஸ் தெரி​வித்​தார்.​ ​ சிதம்​ப​ரத்​தில் ஞாயிற்​றுக்​கி​ழமை நடை​பெற்ற சமூக முன்​னேற்ற சங்​கக் கூட்​டத்​தில் பங்​கேற்று அவர் பேசி​யது:​ விவ​சா​யத்தை மட்​டுமே நம்பி பயன் இல்லை. விவ​சா​யம் பொய்த்​து​விட்​டது. எனவே வன்​னிய சமு​தாய மக்​கள் கல்வி பயில வேண்​டும். இட​ஒ​துக்​கீட்​டுக்​காக பல்​வேறு போராட்​டங்​கள் நடத்​திய பிற​கு​தான் வன்​னி​யர்​க​ளுக்கு இவ்​வ​ளவு இட​ஒ​துக்​கீ​டா​வது கிடைத்​தது. இட​ஒ​துக்​கீடு என்​பது திரை​ய​ரங்​கிலோ,​ திரு​மண வீட்​டில் உண​விற்கோ இடம் பிடிப்​பது அல்ல. கல்வி,​ வேலை​வாய்ப்​பில் உரிய ஒதுக்​கீடு தேவை.​ ​ ஆனால் இது​வரை வன்​னி​யர் சமு​தா​யத்​துக்கு உரிய இட​ஒ​துக்​கீடு கிடைக்​க​வில்லை. அதற்​காக நாம் இன்​றும் ஆட்​சி​யா​ளர்​க​ளி​டையே கையேந்தி வரு​கி​றோம். கடந்த நாடா​ளு​மன்ற தேர்த​லில் பெரும்​பா​லான பெண்​கள் தங்​கள் வாக்​கு​களை விலைக்கு கொடுத்​து​விட்​ட​னர். அனைத்து சாதி​யி​ன​ரும் ஒன்று சேர்ந்து தோற்​க​டித்​து​விட்​ட​னர்.

வன்​னி​யர்​கள் 120 தொகு​தி​க​ளில் உள்​ள​னர். அவர்​கள் அனை​வ​ரும் ஒற்​று​மை​யாக வாக்​க​ளித்​தால் 234 தொகு​தி​க​ளில் 120 தொகு​தி​க​ளில் வெற்​றி​பெ​ற​லாம். வன்​னி​யர்​க​ளுக்கு 20 சத​வீதி இட​ஒ​துக்​கீடு வழங்​கக்​கோரி விரை​வில் மிகப்​பெ​ரிய போராட்​டம் நடத்​தப்​ப​டும் என ச.ராம​தாஸ் தெரி​வித்​தார்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior