உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 24, 2009

பள்ளி வாகனங்களை தணிக்கை செய்ய தனிக்குழு: ஆட்சியர்

கடலூர், நவ. 23:

கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களைத் தணிக்கை செய்து அறிக்கை அனுப்ப, தனிக்குழு அமைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை அறிவித்தார். ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பள்ளி கல்லூரி வாகனங்களில் அனுமதிக்கப் பட்ட இருக்கைகளுக்கு அதிகமாக பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லக் கூடாது. வாகனங்களில் முன்புறமும் பின்புறமும் பள்ளி வாகனம், கல்லூரி வாகனம் என்று தெளிவாக எழுதப்பட வேண்டும். வாகனங்களின் இருபுறமும் பள்ளி, கல்லூரி பெயர் முழு முகவரி, தொலைபேசி எண்கள் தெளிவாக எழுதப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட கூடுதல் வேகத்தில் இயக்கக் கூடாது. பள்ளி கல்லூரி வாகனங்களை ஓட்டுபவர்கள் 10 ஆண்டுக்குக் குறையாத அனுபவம் மிக்கவர்களாக, போக்குவரத்துத் தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்படாதவராக இருக்க வேண்டும். வாகனங்களின் ஜன்னல்களில் இரும்பு குறுக்குக் கம்பி பொருத்தப்பட்டு இருக்க வேணடும். முதல் உதவிப்பெட்டி கட்டாயம் இருக்க வேண்டும். தாழ்பாள்கள் தரமானதாக இருக்க வேண்டும். குழந்தைகள் ஏறிய பின், தாழ்பாள்கள் சரியா மூடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். தீயணைப்புக் கருவிகள் பொருத்தி இருக்க வேண்டும். மேற்கண்ட அறிவுரைகள் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி, கட்டாயம் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அனுமதி மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் இதுதொடர்பாக ஒவ்வொரு வட்டத்திலும் வட்டாட்சியர் தலைமையில் காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, பள்ளி கல்லூரி வாரியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஆணையிடப்பட்டு இருக்கிறது என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior