உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 24, 2009

இட​ஒ​துக்​கீடு:​ மத்​திய அர​சுக்கு ​மக​ளிர் மாநாடு கண்​ட​னம்

கட ​லூர்,​ நவ.23:​

சட்​டப்​பே​ரவை,​ மக்​க​ள​வை​யில் பெண்​க​ளுக்கு 33 சதவீத இட​ஒ​துக்​கீடு மசோ​தாவை நிறை​வேற்​றாத மத்​திய அர​சுக்கு ​ மக​ளிர் காப்​பீட்​டு​க​ழக ஊழி​யர் சங்க வேலூர் கோட்ட உழைக்​கும் மக​ளிர் மாநாடு கண்​ட​னம் தெரி​வித்​துள்​ளது. ​​ காப்​பீட்​டுக் கழக 14-வது உழைக்​கும் மக​ளிர் மாநாடு கட​லூ​ரில் சனிக்​கி​ழமை நடந்​தது. மாநாட்​டில் நிறை​வேற்​றப்​பட்ட தீர்​மா​னங்​கள்:​​ ஐக்​கிய முற்​போக்​குக் கூட்​டணி அரசு ஆட்​சிக்கு வந்து 100 நாள்​க​ளில்,​ மக​ளிர் இட​ஒ​துக்​கீட்டு மசோ​தாவை நிறை​வேற்​று​வோம் என்று தெரி​வித்​தது. ஆனால் இந்த மசோதா குறித்து தற்​போது வாய் திறப்​பதோ இல்லை. மத்​திய அர​சின் அலட்​சி​யப் போக்கை மாநாடு கண்​டிக்​கி​றது. ​ இந்த மசோ​தாவை நிறை​வேற்ற அனைத்து அர​சி​யல் கட்​சி​க​ளும் ஆத​ர​வ​ளிக்க வேண்​டும். ​​ ​ ஊரக வேலை உறுதி சட்​டத்​தில் பெண்​க​ளுக்கு ஊதி​யம் முழு​மை​யாக வழங்​கப்​பட வேண்​டும்,​ பேறு​கால விடுப்​பில் தேவைக்கு ஏற்ற மாற்​றங்​க​ளைக் கொண்​டு​வர வேண்​டும். அனைத்து எல்.ஐ.சி. அலு​வ​ல​கங்​க​ளி​லும் குழந்​தை​கள் காப்​பக வசதி வேண்​டும். பெண்​க​ளுக்கு ஒழுங்​கான ஓய்​வ​றை​கள் ஒதுக்​கப்​பட வேண்​டும் உள்​ளிட்ட ​ தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப் பட்​டன. ​​ மாநாட்​டுக்கு விழுப்​பு​ரம் மாவட்ட இணை அமைப்​பா​ளர் காமாட்சி தலைமை தாங்​கி​னார். கட​லூர் மாவட்ட இணை அமைப்​பா​ளர் எஸ்.ஜெயஸ்ரீ வர​வேற்​றார். தமிழ்​நாடு முற்​போக்கு எழுத்​தா​ளர் சங்​கப் பொதுச் செய​லா​ளர் தமிழ்ச்​செ​ல​வன் தொடக்க உரை நிகழ்த்​தி​னார். அனைத்​திந்​திய ஜன​நா​யக மாதர் சங்க மாவட்​டச் செய​லா​ளர் வாலன்​டீனா,​ காப்​பீட்​டுக் கழக ஊழி​யர் சங்க வேலூர் கோட்​டத் தலை​வர் தச​ர​தன் ஆகி​யோர் வாழ்த்​திப் பேசி​னர். மக​ளிர் துணைக்​குழு கோட்ட அமைப்​பா​ளர் ஃபி​ளா​ரன்ஸ் லிடியா அறிக்கை சமர்ப்​பித்​தார். கோட்​டப் பொதுச் செய​லா​ளர் ராமன் தொகுப்​புரை வழங்​கி​னார். புதுவை இணை அமைப்​பா​ளர் தில​கம் நன்றி கூறி​னார். ​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior