உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 24, 2009

பட்டா வழங்கக் கோரிக்கை

கடலூர், நவ. 23:

காட்டுமன்னார்கோவில் வட்டம் கள்ளிப்பாடி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டும் வழங்காமல் இருக்கும் வீட்டுமனைப் பட்டாக்களை விரைந்து வழங்க வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மேலக்கள்ளிப்பாடி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 100 குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க 1994-ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருக்கிறார். நிலமும் குறிப்பிடப்பட்டது. ஆனால் பட்டா வழங்கப்படவில்லை. 15 ஆண்டுகளாக செல்படுத்தப்படாமல் இருக்கும் ஆட்சியரின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்று கடலூர் மாவட்டச் செயலாளர் சு.திருமாறன் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கோரப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior