உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 19, 2009

டிசம்​பர் 22-ல் அண்​ணா​ம​லைப் பல்​கலை.​ 77-வது பட்​ட​ம​ளிப்பு விழா​: ஆளு​நர் பங்​கேற்பு

​ சிதம்​ப​ரம்,​​ டிச.​ 18:​ 
 
                        சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழ​கத்​தின் 77-வது பட்​ட​ம​ளிப்பு விழா இம்​மா​தம் 22-ம் தேதி செவ்​வாய்க்​கி​ழமை காலை 11 மணிக்கு பல்​க​லைக்​க​ழக பட்​ட​ம​ளிப்பு விழா ​(சாஸ்​தி​ரி​ஹால்)​ மண்​ட​பத்​தில் நடை​பெ​று​கி​றது என துணை​வேந்​தர் டாக்​டர் எம்.ராம​நா​தன் தெரி​வித்​துள்​ளார்.​
 
                        இ​து​ கு​றித்து அவர் செய்​தி​யா​ளர்​க​ளி​டையே வெள்​ளிக்​கி​ழமை தெரி​வித்​தது:​ 
 
                 இவ்​வி​ழா​வில் தமி​ழக ஆளு​ந​ரும்,​​ பல்​கலை.​ வேந்​த​ரு​மான சுர்​ஜித்​சிங் பர்​னாலா பங்​கேற்று 2008-09 ஆம் கல்​வி​யாண்​டில் பயின்ற மாணவ,​​ மாண​வி​யர்​க​ளுக்கு பட்​டங்​க​ளை​யும்,​​ அறக்​கட்​டளை பரி​சு​க​ளை​யும் வழங்​கு​கி​றார்.​ விழா​வில் நேர​டி​யாக 1333 மாண​வர்​க​ளுக்கு பட்​டங்​க​ளை​யும்,​​ பல்​வேறு துறை​க​ளில் அதிக மதிப்​பெண் பெற்ற மாணவ,​​ மாண​வி​யர்​கள் 22 பேருக்கு தங்​கப் பதக்​கங்​க​ளை​யும்,​​ 123 பேருக்கு அறக்​கட்​டளை ரொக்​கப் பரி​சு​க​ளை​யும் வழங்​கு​கி​றார்.​ மேலும் 264 மாண​வர்​க​ளுக்கு பிஹெச்.டி.,​​ எம்.ஃபில்.,​​ டி.எஸ்சி.​ ​(ங.டட்ண்ப்.,​​ டட்.ஈ.,​​ ஈ.ள்ஸ்ரீ)​ ஆராய்ச்சி பட்​டங்​க​ளை​யும் வழங்​கு​கி​றார்.​ நேர​டி​யாக பயி​லும் 4,781 மாணவ,​​ மாண​வி​யர்​க​ளுக்​கும்,​​ தொலை​தூ​ரக் கல்வி இயக்​க​கத்​தின் வாயி​லாக பயின்ற 97,413 மாண​வர்​கள் உள்​ளிட்ட மொத்​தம் 1,03,527 மாண​வர்​க​ளுக்கு தபால் மூலம் பட்​டம் அனுப்​பப்​ப​டு​கி​றது.​ புது​தில்லி பல்​க​லைக்​க​ழக மானி​யக்​குழு துணைத் தலை​வர் பேரா​சி​ரி​யர் வேத்​பி​ர​காஷ் பட்​ட​ம​ளிப்பு விழா சிறப்​பு​ரை​யாற்​று​கி​றார்.​ விழா​வில் இணை​வேந்​தர் எம்.ஏ.எம்.ராம​சாமி எம்பி உள்​ளிட்​டோர் பங்​கேற்​கின்​ற​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior