உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 19, 2009

வேளாண் மையத்​தில் வாங்​கிய​ விதை​நெல்லில் முறை​யா​கக் கதிர் வர​வில்லை

கட​லூர்,​​ டிச.​ 18:​ 

               வேளாண் விரி​வாக்க மையத்​தில் வாங்கி விதைத்த நெல்​லில்,​​ முறை​யா​கக் கதிர் வர​வில்லை என்று  கட​லூ​ரில் நடந்த விவ​சா​யி​கள் குறை​கேட்​கும் கூட்​டத்​தில் புகார் தெரி​விக்​கப்​பட்​டது.​

                    மா​ வட்ட விவ​சா​யி​கள் குறை​கேட்​கும் கூட்​டம் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் தலை​மை​யில் நடந்​தது.​ 

கூட்​டத்​தில் அக​ரம் ஆலம்​பாடி உழ​வர் மன்​றத் தலை​வர் வேல்​மு​ரு​கன் பேசி​யது:​ ​

                              சேத்​தி​யாத்​ தோப்பு வேளாண் விரி​வாக்க மையத்​தில் பிபிடி விதை​நெல் வாங்கி விதைக்​கப்​பட்​டது.​ சுமார் 20 விவ​சா​யி​கள் 50 ஏக்​க​ரில் விதைத்த பிபிடி ரக நெல்,​​ தற்​போது வளர்ந்து கதிர்​வ​ரும் நிலை​யில் உள்​ளது.​ இவற்​றில் பயிர் வீரி​ய​மாக வளர்ந்​தும்,​​ கதிர்​வ​ரு​வது பல்​வேறு நிலை​க​ளில் இருப்​ப​தால் மக​சூல் பாதிக்​கும் நிலை ஏற்​பட்டு உள்​ளது.​ பாதிக்​கப்​பட்ட விவ​சா​யி​க​ளுக்கு நஷ்​ட​ஈடு வழங்க வேண்​டும்.​ தனி​யார் விற்​ப​னை​யா​ளர்​க​ளி​டம் வாங்கி விதைத்த இதே ரக நெல்​லில் இந்​தப் பிரச்னை எழ​வில்லை என்​றும் வேல்​மு​ரு​கன் கூறி​னார்.​ பாதிக்​கப்​பட்ட நெல்​ப​யி​ரை​யும் கொண்டு வந்து மாவட்ட ஆட்​சி​ய​ரி​டம் விவ​சா​யி​கள் காண்​பித்​த​னர்.​

​ப​தில் அளித்து மாவட்ட ஆட்​சி​யர் பேசி​யது:​ 

                     இரு வகை​யான பயிர்​க​ளைச் சேர்த்த ஓட்​டு​ரக நெல்​விதை இது.​ மர​பணு மாற்​றத்​தில் ஏற்​பட்ட குறை​பா​டாக இருக்​க​லாம்.​ இத்​த​கைய விதை​களை சோதனை வயல்​க​ளில் நடவு செய்து பார்த்து,​​ பின்​னர் விவ​சா​யி​க​ளுக்கு வழங்கி இருக்க வேண்​டும்.​ 

                     இது​கு​றித்து வேளாண் துறை நட​வ​டிக்கை எடுக்​கும்.​ விதை நெல் எங்​கி​ருந்து வாங்​கப்​பட்​டது என்று தெரிந்து நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என்​றார் ஆட்​சி​யர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior