உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 19, 2009

பண்ருட்டியில் காலா​வ​தி​யான உணவு பொருட்​கள் பறி​மு​தல்

பண்​ருட்டி,​​ டிச.​ 18:​ 

                             விற்​ப​னைக்​காக கடை​க​ளில் வைக்​கப்​பட்​டி​ருந்த காலா​வ​தி​யான மற்​றும் உற்​பத்தி தேதி​யில்​லாத உண​வுப் பொருள்​களை,​​ பண்​ருட்டி நக​ராட்சி ஊழி​யர்​கள் பறி​மு​தல் செய்து வெள்​ளிக்​கி​ழமை அழித்​த​னர்.​

                            பண் ​ருட்டி நக​ராட்சி ஆணை​யர் கே.உமா​ம​கேஸ்​வரி தலை​மை​யில் சுகா​தார அலு​வ​லர் பால​சந்​தி​ரன் உள்​ளிட்ட ஊழி​யர்​கள் வியா​ழக்​கி​ழமை,​​ வெள்​ளிக்​கி​ழமை ஆகிய இரு நாள்​க​ளில் நக​ரப் பகு​தி​யில் உள்ள கடை​க​ளில் திடீர் சோத​னை​யில் ஈடு​பட்​ட​னர்.​ சோத​னை​யின் போது காலா​வ​தி​யான மற்​றும் உற்​பத்தி தேதி,​​ விலா​சம் இல்​லாத மளி​கைப் பொருள்​கள்,​​ நெய்,​​ எண்ணெய் வகை​களை பறி​மு​தல் செய்து அழித்​த​னர்.​

                          அ ​தன் பின்​னர் நிரு​பர்​க​ளி​டம் ஆணை​யர் கே.உமா​ம​கேஸ்​வரி கூறி​யது:​ ​ பொது சுகா​தா​ரத் துறை உத்​த​ர​வின் பேரில் பண்​ருட்டி நக​ரப் பகு​தி​யில் உள்ள கடை​க​ளில் சோதனை மேற்​கொண்​டோம்.​ இரு நாள்​க​ளாக செய்த சோத​னை​யில் விதி​களை மீறி விற்​கப்​பட்ட சமை​யல் பொருள்​கள் உள்​ளிட்​ட​வற்றை பறி​மு​தல் செய்​தோம்.​ இனி தொடர்ந்து ஆய்வு செய்​யப்​ப​டும்.​

                        இந்​ நி​லை​யில் வியா​ழக்​கி​ழமை சோத​னை​யின் போது விற்​ப​னைக்​காக கடை​யில் வைக்​கப்​பட்​டி​ருந்த பாலித்​தீன் கவர்​களை பறி​மு​தல் செய்​த​னர்.​ முன் அறி​விப்பு ஏது​மின்றி பாலித்​தீன் கவர்​களை பறி​மு​தல் செய்​த​தால் வியா​பா​ரி​கள் கண்​ட​னம் தெரி​வித்​த​னர்.​

                            இதை தொடர்ந்து வியா​பா​ரி​களை சம​ர​சம் செய்த நகர மன்​றத் தலை​வர் எம்.பச்​சை​யப்​பன்.​ இனி​வ​ரும் காலத்​தில் உரிய அறி​விப்பு செய்து நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என்​றும்,​​ நக​ரை​யும்,​​ சுற்​றுப்​பு​றத்​தை​யும் தூய்​மை​யாக வைத்​துக்​கொள்ள 20 மைக்​கி​ரான்​க​ளுக்கு கீழ் உள்ள பாலித்​தீன் கவர்​களை விற்​பனை செய்​யா​மல் இருக்க வியா​பா​ரி​கள் ஒத்​து​ழைக்க வேண்​டும் என கேட்​டுக்​கொண்​டார்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior