உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 19, 2009

என்.எல்.சி.​ அறி​வித்த ரூ.25 கோடி திட்​டத்தை நிறை​வேற்ற வேண்​டும்

கட​லூர்,​​ ​ டிச.​ 18:​ 

                    20 கிரா​மங்​களை வெள்​ளத்​தில் இருந்து காப்​பாற்ற,​​ ரூ.25 கோடி செல​வில் வாலாஜா ஏரியை அழப்​ப​டுத்த என்.எல்.சி.​ நிறு​வ​னம் 2 ஆண்​டு​க​ளுக்கு முன் அறி​வித்த திட்​டத்தை,​​ விரை​வில் நிறை​வேற்ற வேண்​டும் என்று விவ​சா​யி​கள் வற்​பு​றுத்​தி​னர்.​

                      க​ட​லூர் மாவட்ட விவ​சா​யி​கள் குறை​கேட்​கும் கூட்​டம் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் தலை​மை​யில் வெள்​ளிக்​கி​ழமை நடந்​தது.​ கூட்​டத்​தில் விவ​சாய சங்​கங்​க​ளின் பிர​தி​நி​தி​கள் பேசி​யது:​

                                       ப​ர​வ​னாறு பாச​னம் மற்​றும் வடி​கால் மேம்​பாட்​டுச் சங்க செய​லா​ளர் பொறி​யா​ளர் அ.ராஜேந்​தி​ரன்:​ கரை​க​ளற்ற பர​வ​னாற்​றின் கரை​யோ​ரம் வசிக்​கும் பொது​மக்​க​ளும் விவ​சா​யி​க​ளும் ஆண்​டு​தோ​றும் துய​ரத்​தில் ஆழ்த்​தப்​ப​டு​கி​றார்​கள்.​ 20 கிரா​மங்​கள் ஆண்​டு​தோ​றும் வெள்​ளத்​தில் சிக்​கித் தவிக்​கின்​றன.​ ​ கரை​யோ​ரம் உடைப்​பெ​டுத்து,​​ அவற்றை சீர​மைக்க ஆண்​டு​தோ​றும் ரூ.2 கோடி வரை செல​வி​டப்​ப​டு​கி​றது.​ ஆனால் நிரந்​த​ரத்​தீர்வு காணப்​ப​ட​வில்லை.​ அர​சுப் பணம் வீணாக செல​வி​டப்​ப​டு​கி​றது.​ ​ ​

                                த​லைப் பர​வ​னாறு பகு​திக்கு உள்​பட்ட வாலாஜா ஏரியை ஆழப்​ப​டுத்த வேண்​டும்.​ இந்த ஏரிக்கு வரும் நீர் தங்​கா​மல் வழிந்​தோடி விடு​கி​றது.​ வாலாஜா ஏரி​யைத் தூர்​வார என்.எல்.சி.​ நிறு​வ​னம் ரூ.25 கோடி ஒதுக்​கி​ய​தாக அறி​விப்பு வந்து 2 ஆண்​டு​க​ளுக்​கு​மேல் ஆயிற்று,​​ விரை​வில் இப்​ப​ணி​யைத் தொடங்க வேண்​டும்.​÷ப​ர​வ​னாற்றை ஆழப்​ப​டுத்தி கரை​கள் அமைத்து 20 கிரா​மங்​களை வெள்​ளப்​பாழ் நிலை​யில் இருந்து காப்​பாற்ற வேண்​டும்.​ இதன்​மூ​லம் 20 ஆயி​ரம் விவ​சா​யக் குடும்​பங்​க​ளும் 20 ஆயி​ரம் ஏக்​கர் நிலங்​க​ளும் காப்​பாற்​றப்​ப​டும்.​ ​

                                 பா​சி​முத்​தான் ஓடை விவ​சா​யி​கள் சங்​கத் தலை​வர் ரவீந்​தி​ரன்:​ வட​கி​ழக்​குப் பரு​வ​ம​ழைக் காலத்​தில் வீரா​ணம் ஏரி​யின் நீர்​மட்​டத்தை 44 அடிக்கு மேலும் உயர்த்​தி​யது தவறு.​ இத​னால் ஒரே நேரத்​தில் 18 ஆயி​ரம் கன அடி உப​ரி​நீரை வெளி​யேற்​றும் நிலை ஏற்​பட்டு பயிர்​கள் பாதிக்​கப்​பட்டு உள்​ளன.​ எதிர்​கரை பகு​தி​யில்,​​ 15 கிரா​மங்​களை ஏரி நீர் சூழ்ந்​துள்​ளது.​ பாசி​முத்​தான் ஓடை​யில் ரூ.​ 1 லட்​சம் செல​விட்டு 3-வது ரெகு​லேட்​டரை சீர​மைத்​த​தா​கத் தெரி​விக்​கி​றார்​கள்.​ ஆனால் அத்​த​கைய பணி எது​வும் நடக்​க​வில்லை.​ விசா​ர​ணைக்கு உத்​த​ர​விட வேண்​டும்.​

                         இந்த ஆண்டு உளுந்து விதைத் தட்​டுப்​பாடு ஏற்​ப​டும் நிலை உள்​ளது.​ போது​மான அள​வுக்கு விதை உளுந்து கையி​ருப்பை அதி​க​ரிக்க வேண​டும்.​ ​

                         வெ​லிங்​டன் ஏரி பாசன விவ​சா​யி​கள் சங்​கச் செய​லா​ளர் பெண்​ணா​டம் சோம​சுந்​த​ரம்:​ பெண்​ணா​டம் சர்க்​கரை ஆலை​யில் 26 ஆயி​ரம் டன் கரும்​புக்கு டன்​னுக்கு ரூ.66 வீதம் சட்ட விரோ​த​மா​கப் பிடித்​தம் செய்​யப்​பட்டு உள்​ளது.​ விவ​சா​யி​க​ளுக்கு இந்​தப் பணத்​தைப் பெற்​றுத் தர​வேண்​டும்.​ விருத்​தா​ச​லம் திட்​டக்​குடி தாலு​காக்​க​ளில் பட்டா மாறு​தல் மனுக்​கள் ஏரா​ள​மாக நிலு​வை​யில் உள்​ளன.​ அவற்​றுக்கு விரை​வில் தீர்வு காண வேண்​டும்.​

                                     வி​வ​சாய சங்​கக் கூட்​ட​மைப்​பின் மாவட்​டச் செய​லா​ளர் கார்​மாங்​குடி வெங்​க​டே​சன்:​ அனைத்து விவ​சா​யி​க​ளுக்​கும் மானிய விலை​யில் வேளாண் இயந்​தி​ரங்​கள் கிடைக்க வேண​டும்.​ ஒழுங்​கு​முறை விற்​ப​னைக் கூடங்​க​ளில் நெல் உள்​ளிட்ட அனைத்து வேளாண் விளை பொருள்​க​ளுக்​கும்,​​ அரசு அறி​விக்​கும் குறைந்​த​பட்ச விலை கிடைக்க நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்.​ ​ ​÷வே​று​பல விவ​சா​யி​கள் பேசு​கை​யில்,​​ அத்​திப்​பட்டு கூட்​டு​றவு சங்​கத்​தில் பெரு​ம​ள​வில் முறை​கேடு நடந்​துள்​ளது.​ ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்​பட்டு உள்​ளது.​ நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும.​ பண்​ருட்டி சித்​தே​ரியை ஆழப்​ப​டுத்த வேண்​டும் அதில் உள்ள ஆக்​கி​ர​மிப்​பு​களை அகற்ற வேண்​டும் என்​றும் கோரி​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior