உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 12, 2009

மடக்​கிப்​ பி​டிக்​கப்​பட்ட லாரி சோத​னைக்​குப் பிறகு விடு​விப்பு

கட​லூர்,​​ டிச.​ 11:​ 

                       கட​லூர் சிப்​காட் ஆலை​யில் இருந்து வியா​ழக்​கி​ழமை இரவு புறப்​பட்​டுச் சென்ற ரசா​ய​னக் கழிவு லாரியை சந்​தே​கத்​தின் பேரில் அதி​கா​ரி​கள் சோத​னை​யிட்​ட​னர்.​ ​​ சிப்​காட் தொழிற்​பேட்​டை​யில் விலங்​கு​க​ளின் எலும்​பில் இருந்து உரம் மற்​றும் ​ கோழித்​தீ​வ​னம் தயா​ரிக்​கும் ரசா​யன தொழிற்​சாலை இயங்கி வரு​கி​றது.​   இந்த ஆலை​யில் இருந்து ரசா​யான கழி​வு​களை ஏற்​றிக்​கொண்டு வியா​ழக்​கி​ழமை இரவு புறப்​பட்ட லாரி விழுப்​பு​ரத்​துக்கு சென்​று​கொண்​டி​ருந்​தது.​ லாரியை திண்​டி​வ​னத்​தைச் சேர்ந்த காஜா ஓட்​டிச்​சென்​றார்.​
             
              இந்​நி​லை​யில்,​​ கட​லூர் முது​ந​கர் பகு​தி​யில் வந்து கொண்​டி​ருந்த இந்த லாரியை சந்​தே​கத்​தின்​பே​ரில் அப் பகுதி பொது​மக்​க​ளும்,​​ நுகர்​வோர் பாது​காப்பு சங்​கத்​தி​ன​ரும் மடக்​கிப் பிடித்​த​னர்.​   மேலும்,​​ இது​கு​றித்து அதி​கா​ரி​க​ளுக்கு தக​வல் தெரி​வித்​த​னர்.​ இதைத் தொடர்ந்து லாரி அரு​கே​யுள்ள காவல் நிலை​யத்​துக்​குக் கொண்டு செல்​லப்​பட்​டது.​

            த ​க​வ​ல​றிந்த கோட்​டாட்​சி​யர் செல்​வ​ராஜ்,​​ வட்​டா​ரப் போக்​கு​வ​ரத்து அலு​வ​லர் ஜெயக்​கு​மார்,​​ மாசு கட்​டுப்​பாட்டு வாரிய அலு​வ​லர் சேகர் ஆகி​யோர் அங்கு விரைந்து வந்து விசா​ரணை நடத்​திய பிறகு லாரியை விடு​வித்​த​னர்.​

               பின்​னர் இது​கு​றித்து மாசு காட்​டுப்​பாட்டு வாரிய அலு​வ​லர் சேகர் கூறி​யது:​ ரசா​யன கழி​வு​களை ஏற்​றிக்​கொண்ட புறப்​பட்ட இந்த லாரி முறை​யாக அனு​மதி பெற்று தான் விழுப்​பு​ரம் மாவட்​டத்​தில் உள்ள உயி​ரி​யல் உரம் தயா​ரிக்​கும் ஆலைக்​குச் சென்​று​கொண்​டி​ருந்​தது.​ இது விசா​ர​ணை​யில் தெரிய வந்​தது.​இ​ருப்​பி​னும்,​​ கடந்த சில மாதங்​க​ளாக இந்த ஆலை​யில் இருந்து வெளி​யேற்​றப்​ப​டும் கழிவு முறை​யாக விழுப்​பு​ரம் மாவட்​டத்​தில் உள்ள சம்​பந்​தப்​பட்ட ஆலைக்கு தான் கொண்டு செல்​லப்​ப​டு​கி​றதா என்​பதை உறு​தி​செய்ய வேண்​டும் என உத்​த​ர​வி​டப்​பட்​டுள்​ளது என்​றார் அவர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior