உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 12, 2009

பொதுவிநியோக திட்டப்பணி கணினி மயமாக்க வேண்டும்

கடலூர் :

                              தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் கட லூரில் நடந்தது.

                                மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். அமைப்பு செயலாளர் தங்கராசு வரவேற்றார்.
மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் பேசினார். மாநில தலைவர் சாமிநாதன், பொது செயலாளர் ராஜேந்திரன், மாநில துணை தலைவர் ஜெயசந்திர ராஜா கருத்துரை வழங்கினர். அரசு பணியாளர் தொழிற்சங்க கூட்டமைப்பு சிவராமன், அமைச்சு பணியாளர் சங்கம் சிங்காரம், சத்துணவு பணியாளர் சங்கம் சீனுவாசன் வாழ்த்துரை வழங்கினர்.

                             கூட்டத்தில் பொது வினியோக திட்டத்தை தனித்துறையாக அறிவிக்க வேண்டும். சம வேலைக்கு, சம ஊதியம் என்ற அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும். அரசு நிரந்தர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். பொதுவிநியோக திட்டத்தின் அனைத்து பணிகளையும் கணினிமயமாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நகர அமைப்பாளர் தேவராஜ் நன்றி கூறி னார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior