உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 12, 2009

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் உணவு பதப்படுத்துதல் பயிற்சி

சிதம்​ப​ரம்,​​ டிச.​ 11: ​ 

                     இந்​தி​யா​வில் உணவு சரி​யாக பதப்​ப​டுத்​தப்​ப​டா​த​தால் ஆண்​டுக்கு ரூ.50 ஆயி​ரம் கோடி இழப்​பீடு ஏற்​ப​டு​கி​றது என அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக துணை​வேந்​தர் டாக்​டர் எம்.ராம​நா​தன் தெரி​வித்​தார்.​

                   அண்​ணா​ம​லைப் பல்​கலை.​ வேளாண்​பு​லத்​தில் வேளாண் பொரு​ளா​தா​ரத் துறை​யும்,​​ புது​தில்லி மத்​திய உயிர் தொழில்​நுட்​பத் துறை​யும் இணைந்து நடத்​தும் மிக​வும் பின் தங்​கிய தாழ்த்​தப்​பட்ட மக​ளி​ருக்​கான 5 நாள் உணவு பதப்​ப​டுத்​து​தல் குறித்த தொழில் முனை​வோர் பயிற்சி முகாம் திங்​கள்​கி​ழமை தொடங்​கி​யது.​ பயிற்​சி​யில் சுமார் 100 பெண்​கள் பங்​கேற்​ற​னர்.​ து​ணை​வேந்​தர் டாக்​டர் எம்.ராம​நா​தன் குத்​து​வி​ளக்​கேற்றி முகாமை தொடங்கி வைத்​துப் பேசி​யது:​ உ​ணவு சரி​யாக பதப்​ப​டுத்​தப்​ப​டா​த​தால் ஆண்​டுக்கு ரூ.50 ஆயி​ரம் கோடி இழப்​பீடு ஏற்​ப​டு​கி​றது.​ இந்த இழப்​பீட்டை தவிர்க்க இது​போன்ற பயற்சி மிக​வும் அவ​சி​ய​மா​ன​தா​கும்.​ மிக​வும் பின் தங்​கிய மாவட்​ட​மான கட​லூர் மாவட்​டத்​தில் இந்த பயிற்சி அளிப்​பது மிக​வும் வரப்​பி​ர​சா​த​மா​கும் என துணை​வேந்​தர் எம்.ராம​நா​தன் தெரி​வித்​தார்.​ வேளாண்​புல முதல்​வர் பி.நாரா​ய​ண​சாமி தலைமை வகித்​தார்.​ வேளாண் பொரு​ளா​தா​ரத் துறைத் தலை​வர் கே.ஆர்.சுந்​த​ர​வ​ர​த​ரா​ஜன் வர​வேற்​றார்.​ இந்​தி​யன் ஒவர்​ஸீஸ் வங்கி முது​நிலை மண்​டல மேளா​ளர் பி.பாஸ்​கர் சிறப்​பு​ரை​யாற்​றி​னார்.​ தொழில் முனை​வோர் பயிற்சி முகா​மில் பயிற்சி பெற்று தொழி​ல​தி​ப​ரான விரு​து​ந​கர் ராஜ்​கு​மார் தனது அனு​ப​வங்​களை எடுத்​து​ரைத்​தார்.​ நி​கழ்ச்​சியை விரி​வு​ரை​யா​ளர் சீனு​வா​சன் தொகுத்து வழங்​கி​னார்.​ விரி​வு​ரை​யா​ளர் ஆர்.ரங்​க​ரா​ஜூலு நன்றி கூறி​னார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior