உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 26, 2010

கடலூரில் 10 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

கடலூர் : 

                 கடலூர் முதுநகரில் கேட்பாரற்று கிடந்த 6,500 ரூபாய் மதிப்புள்ள 500 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 

                      ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜன், பறக்கும்படை தாசில்தார் கண்ணன், வருவாய் அதிகாரிகள் சங்கர், சுப்ரமணியன் ஆகியோர் கடலூர் முதுநகர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இருசப்பச்செட்டித் தெருவில் 6,500 ரூபாய் மதிப்புள்ள 50 கிலோ எடைகொண்ட 10 மூட்டை ரேஷன் அரிசி கேட்பாரற்று கிடந்தது. அதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் கடலூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior