உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 26, 2010

சிதம்பரத்தில் திறப்பு விழாவிற்கு தயாரான தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு

 
சிதம்பரம் : 

              சிதம்பரம் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு ஒரு கோடியே 50 ரூபாய் செலவில் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. 

                     சிதம்பரம் ரயில் நிலையம் அருகே தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் வீரர்கள் குடியிருப்பு இல் லாமல் தவித்து வந்தனர். அதனையொட்டி அவர்களுக்கு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் மூலம் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் குடியிருப்புகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பணி துவங்கியது. நிலைய அலுவலர் குடியிருப்பு மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான 24 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்து காண்ட்ராக்டர்கள் சாவியையும் ஒப்படைத்து விட்டதால் திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior