உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 26, 2010

வாழ்க்கைக்கு தமிழ்; வயிற்றுப் பிழைப்பிற்கு ஆங்கிலம் : கிருஷ்ணராஜ் வானவராயர்




குறிஞ்சிப்பாடி : 

             ""ஓட்டுப் போட்டு அனுப்பியவர்கள் பார்த்துக் கொள்வர் என்ற மெத்தனம், அலட்சியம், அறியாமையால், 63 ஆண்டுகள் வளர்ச்சி அடையாமல் இருந்து வருகிறோம்,'' என, பாரதிய வித்யபவன் கோவை கேந்திராவின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் பேசினார்.

                கடலூர் மாவட்டம் வடலூர் சுத்த சன்மார்க்க நிலையம் சார்பில் சென்னை மாகாண முன்னாள் முதல்வர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் 40ம் ஆண்டு நினைவு நாள், சுத்த சன்மார்க்க நிலையத்தின் 60ம் ஆண்டு வைர விழா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா டாக்டர் நா.மகாலிங்கம் கலையரங்கில் நேற்று நடந்தது. ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனங்கள் தாளாளர் செல்வராஜ் வரவேற்றார். சுத்த சன்மார்க்க நிலைய துணைத் தலைவர் ஊரன் அடிகளார் தலைமை தாங்கினார். என்.எல்.சி., சுரங்கங்கள் இயக்குனர் சுரேந்திரமோகன் ஓ.பி.ஆர்., உருவப் படத்தை திறந்து வைத்தார்.

பாரதிய வித்யபவன் கோவை கேந்திராவின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் பேசியது: 

                 நான் அரசியலை பற்றியோ, ஓ.பி.ஆரை பற்றியோ பேசப்போவது இல்லை. ஓ.பி.ஆரைப் பற்றி அவர் புத்தகங்கள் படித்தாலே தெரிந்து கொள்ளலாம். உங்களிடம் இருந்து ஒரு ஓ.பி.ஆர்., போன்றவரை உருவாக்க வேண்டும் என்பதற்காக பேச வந்துள்ளேன். இளைஞர்களுக்கு எங்களைப் போன்றவர்களுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இளைஞர்கள் திறந்த மனதுடன், புதிய கருத்துக்களை பரிசீலித்து நியாயம் இருந்தால் ஏற்றுக் கொள்வர். அளவற்ற அறிவாற்றல் உண்டு.

                   எங்களுக்கு அறிவு இருக்குமே தவிர ஆற்றல் இல்லை. இளைஞர்கள் எதிலும் துணிவுடன் செயல்படுவர். அது எங்களை போன்றவரிடம் இல்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த போது உலகில் அனைவரும் இந்தியா பிரிந்து துண்டு துண்டாகி விடும் என எண்ணினர். அதை உடைத்து 63 ஆண்டுகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். உலகத்திலேயே சூப்பர் பவர் இந்தியர்களாகிய நாம் தான். இருந்தாலும் 8 சதவீத மக்கள், குழந்தைகள் உணவு இல்லாமல் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். 

                      சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் வளர்ச்சி அடைந்தும் ஏழைகள் இருக்கின்றனர். இதைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். இத்தனை ஆண்டுகளும் மக்களை வளர்ச்சிக்கு பயன்படுத்தவில்லை என்பதை உணர வேண்டும். சுதந்திரம் அடைந்த பிறகு மக்கள் இயக்கமாக இல்லாமல், நாம் ஓட்டு போட்டு அனுப்பியவர்கள் பார்த்துக் கொள்வர் என்று மெத்தனம், அலட்சியம், அறியாமையால் 63 ஆண்டுகள் வளர்ச்சி அடையாமல் இருந்து வருகிறோம். 

                             கல்வி வழங்கினால் விழிப்புணர்வு ஏற்பட்டு அறியாமை அழிந்து விடும் என கல்வி வழங்கினோம். கல்வி விழிப்புணர்வு வளர்ந்ததே தவிர பொறுப்புகள் வளரவில்லை. கல்வி கற்றவர்கள் மூன்று பொறுப்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்வியை மாற்றி அமைப்பது, ஆன்மிக அறிவியலை மாற்றுவது, தேசிய பொறுப்பு, இவைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

நம் கல்வியின் குறிக்கோள் என்ன தெரியுமா? 

                     வாழ்க்கைக்கு தமிழ், வயிற்று பிழைப்புக்கு ஆங்கிலம், கல்வியின் குறிக்கோளை புரிந்து கொள்ள வேண்டும். நம் நாட்டு கல்வி குறித்து குழந்தைசாமி தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பல அயல் நாட்டு அறிஞர்கள் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர். அவர்கள் கூறியது, அறிவுரை எதுவும் இல்லை. அறிந்து கொள்ள அதிகம் உள்ளது என்றனர். அந்தக் கல்வி அலமாரியில் இருந்து வெளியே வரவில்லை. இவ்வாறு கிருஷ்ணராஜ் வானவராயர் பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior