உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 26, 2010

மேல்பட்டாம்பாக்கத்தில் தொழுநோய் கண்டறியும் பயிற்சி

கடலூர் : 
 
             மேல்பட்டாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம தாதியர்களுக்கு தொழு நோய் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது. 

               நிலைய மருத்துவர் டாக்டர் பரிமேலழகர் தலைமை தாங்கினார். மருத்துவமல்லா மேற்பார்வையாளர் நசீர் அகமத் வரவேற்றார். முகாமில் தொழு நோய் ஆரம்ப அறிகுறிகள் கண்டுபிடிக் கும் விதம், புதிய கூட்டு மருந்து சிகிச்சை ஆகியவை குறித்து மருத் துவரல்லா மேற்பார்வையாளர் ராமலிங்கம் விளக்கிக் கூறினார். மேலும் முட நீக்குனர் அந்தோணிதாஸ் பயிற்சி அளித்தார். முகாமில் அனைத்து கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர், சமுதாய சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர் மற்றும் பணியாளர்களும் பங்கேற்றனர். பயிற்சி ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் அரிகிருஷ்ணன், சேகர் செய்திருந்தனர். சுகாதார ஆய்வாளர் பாலு நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior