உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 26, 2010

பயன்பாடின்றி எரிவாயு தகன மேடை பண்ருட்டியில் ரூ.58 லட்சம் வீண்

பண்ருட்டி : 

              பண்ருட்டியில் 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை பயன்பாடின்றி வீணாகி வருகிறது. 

                பண்ருட்டி கெடிலம் ஆற்றங்கரையோரம் நகராட்சி சார்பில் 43 லட்சம் ரூபாய் செலவில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது. ஆற்றங்கரையோரம் உள்ளதால் மழைக் காலத்தில் வெள்ளத்தில் வீணாகி விடும் என்பதால் 15 லட்சம் ரூபாய் செலவில் கான்கிரீட்டால் ஆன சுற்றுச்சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சுற்றுச்சுவர், தியான மண்டபம், ஆர்ச், சாலை அமைக்க கடந்த ஒன்னரை ஆண்டுகளுக்கு முடிவு செய்யப்பட்டு 15 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் துவங்கி பாதியில் நின்றது. 

                    இதற்கிடையே கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி காடாம்புலியூர் வருகை தந்த துணை முதல்வர் ஸ்டாலின் நவீன எரிவாயு தகன மேடையை துவக்கி வைத்தார். அதன் பின் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அனாதை பிணத்தை எரித்து சோதனை செய்தனர். ஆனால் தியான மண்டபம் உள்ளிட்ட பணிகள் முடிவு பெறாத நிலையில் உள்ளது. அரசு திட்டபடி குறிப்பிட்ட நாட்களுக்குள் பணிகளை முடிக்காமல் ஒன்னரை ஆண்டை வீணடித்துள்ளதால் தற்போது திட்ட மதிப்பீடு உயர்ந்துள்ளது மட்டுமின்றி எரிவாயு மிஷன் செயல் படாமல் வீணாகி வருகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior