உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 26, 2010

கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கடலூர் : 

             கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது. 

              பள்ளி முதல்வர் அக் னல் முன்னிலை வகித் தார். கல்லூரி முதல்வர் ரட்சகர் துவக்கி வைத்தார். விழாவில் பாலர் பள்ளி முதல்வர் ஆரோக்கியராஜ், உள்விடுதி தந்தை மரிய அந்தோணி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். வகுப்பு வாரியாக மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். கண்காட்சியில் பல் வேறு தலைப்புகளில் 150 காட்சிப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தது. 

                    மின்சாரம் இல்லாமல் இயங்கும் அரவை இயந்திரம், குப்பைகளை பிரிக்கும் இயந்திரம் உள்ளிட்ட கண்டுபிடிப்புகள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக மாணவர்கள் வடிவமைத்திருந்த பிரமாண்ட ரோபா மனிதன் அனைவரையும் கவர்ந்தது. ஏற்பாடுகளை மரிய சேவியர், ஜான்பீட்டர், ஆரோக்கியதாஸ், சின்னப்பராஜ், வாசு, விமல்ராஜ், பாரி, மேஸ், டேவிட் ஆகியோர் செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior