உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 23, 2010

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.56 லட்சம் மானியத் தொகை

சிதம்பரம் : 

            அண்ணாமலை நகர் பேரூராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் ஒரு லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. பேரூராட்சித் தலைவர் கீதா கலியமூர்த்தி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சுவர்ண ஜெயந்தி சகாரி ரோஜ்கார் யோஜனா திட்டம் 2009 - 10ல் நகர்ப்புற சுய வேலை வாய்ப்புத் திட்டம், நகர்ப்புற பெண் கள் சுய உதவித் திட்டம், சிக்கனம் மற்றும் நாணய சங்கம் திட்டங்களின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மானியத் தொகையாக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 750 ரூபாய்க்கான காசோலை வழங்கப் பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior