உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 23, 2010

காங்., மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏற்றம் தர முடியும்: செல்வப்பெருந்தகை

திட்டக்குடி : 

           மத்தியில் ஆளும் காங்., அரசால் மட்டுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஏற்றம் தர முடியும் என எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை பேசினார்.

            திட்டக்குடி தொகுதியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இறையூர் சமுதாய நலக் கூடம், தி.அகரம் கிராமத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. மேலும் இறையூர், தொளாளர் ஊராட்சிகளில் 2,242 பயனாளிகளுக்கு இலவச கலர் "டிவி' வழங்கப்பட்டது.

புதிய கட்டடங்களை திறந்து வைத்து "டிவி' வழங்கிய எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை  கூறுகையில், 

                "வெலிங்டன் நீர்த்தேக்கத் திற்கு 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி சீரமைப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து வருவது மன நிறைவு ஏற்பட்டுள்ளது. வெலிங்டன் நீர்த்தேக்க பாசன வாய்க்கால்களில் தொளாளர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும் கால்வாய்கள் மற்றும் வெள்ளாறு - வெலிங்டன் கால்வாய்களை சீரமைக்க முதல்வரிடம் வலியுறுத்துவேன். மத்தியில் ஆளும் காங்., அரசால் மட்டுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஏற்றம் தர முடியும்' என கூறினார்.

                       விழாவில் தாசில்தார் கண்ணன், துணைதாசில்தார்கள் அண்ணா துரை, திருநாவுக்கரசு, பேரூராட்சி சேர்மன் அமுதலட்சுமி, தி.மு.க., நகர செயலாளர் குமரவேல், ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior