உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 23, 2010

கிராம மாணவர்கள் டாக்டர்களாக வாய்ப்பு வழங்கியவர் கருணாநிதி : அமைச்சர் பன்னீர்செல்வம்

சிதம்பரம் : 

           கிராமப்புற மாணவர்களும் டாக்டர்களாகும் வாய்ப்பை முதல்வர் கருணாநிதி உருவாக்கி கொடுத்திருக்கிறார் என சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளி விழா ஆண்டின் நிறைவு விழா நேற்று நடந்தது. பள்ளி தாளாளர் லட்சுமிகாந் தன் தலைமை தாங்கினார்.

பள்ளியில் 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மழலையர் பிரிவு வகுப்பறை கட்டடங் களை திறந்து வைத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் பேசியது: 

              பள்ளிகளை நிர்வகிப்பது சாதாரண விஷயமல்ல. குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப் பது முதல் அவர்கள் பத்திரமாக வீடு போய் சேரும் வரை நிம்மதி இருக்காது. சிதம்பரத்தில் குப்பம்மாள் ராமசாமி கல்வி பண்பாட்டு அறக் கட்டளை சார்பில் 1985ம் ஆண்டு பள்ளி துவங்கப்பட்டு வெள்ளி விழா கொண்டாடுகிறது. பள்ளி தாளாளரின் முழு உழைப்பே இதற்கு காரணம்.அரசு பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப் பட்டுள்ளனர். இந்த விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இப்பள்ளியில் 23 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் உள்ளனர். இங்கு படித்த மாணவர்கள் பலர் டாக்டர்களாகவும், இன்ஜினியர்களாகவும் படிக்கும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

                   தமிழகத்தின் முதல்வராக 5வது முறையாக கருணாநிதி பொறுப் பேற்ற பிறகு கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் டாக்டர் களாகும் வாய்ப்பு உருவாக்கப்பட் டுள்ளது. இந்தியாவில் தமிழகத் தில் தான் அதிக மருத்துவ கல் லூரிகள் உள்ளன. ஆண்டுக்கு 5000 டாக்டர்கள் வெளிவருகின்றனர். அதனால் மக்களுக்கு தரமான சிகிச்சை கொடுக்கப்படுகிறது. அதே போன்று அரசு கல்லூரிகளிலும் "ஷிப்ட்' முறை அறிமுகப்படுத்தப்பட்டு மாணவர்களின் எண் ணிக்கை இரு மடங்காக உயர்த்தப் பட்டுள்ளது. நான் சிறப்பாக செயல்படுவதாக கூறினர். நாங்கள் செயல்படவில்லை, எங்களை முதல்வர் கருணாநிதி ஊக்குவிக்கிறார். அதனால் செயல்பட வேண்டிய சூழ் நிலை. இவ்வாறு அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார்.

                     தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சபாபதிமோகன், அருண்பிரசாத் நினைவு உள்விளையாட்டரங்கை திறந்து வைத்து பேசினார். விழாவில் ஒன்றிய சேர்மன்கள் செந்தில்குமார், மாமல்லன், முத் துப்பெருமாள், பள்ளி துணை செயலாளர் கஸ்தூரி, வீனஸ் பள்ளி தாளாளர் குமார், பி.ஆர்.ஓ., செல்வம், பள்ளி முதல்வர்கள் மீனாட்சி, சக்தி, துணை முதல்வர் ஷீலா, நிர்வாக அலுவலர் சந்திரசேகர், கல்வியியல் கல்லூரி முதல்வர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior