உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 23, 2010

மரவள்ளிக்கு மானிய விலையில் உரங்கள்: அரசுக்கு கோரிக்கை

சிறுபாக்கம் : 

             மங்களூர், நல்லூர் ஒன்றியங்களில் மானிய விலையில் உரங்கள் வழங்க மரவள்ளி விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

                மங்களூர், நல்லூர் ஒன்றியங்களில் உள்ள பெரியநெசலூர், விளம்பாவூர், கழுதூர், பாசார், சிறுபாக்கம், மங்களூர், ஒரங்கூர், பனையந்தூர், அரசங்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் நிலத்தடி நீரைக் கொண்டு 2 முதல் 3 ஏக்கர் வரை மரவள்ளி பயிர் ரகங்களான குங்குமரோஸ், பர்மா, வெள்ளை ரோஸ் ஆகிய மரவள்ளி பயிர்களை பயிர் செய்துள்ளனர்.

                 கடந்த ஜனவரி மாதத தில் பயிர் வைக் கப்பட்ட மரவள்ளி முழு அளவில் வளர்ச்சி பெறும் தருணத்தில் உள்ளது. தற்போது மரவள்ளி செடிகளில் அடி உரம் வைக்கும் தருணம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தேவையான பொட்டாஷ், யூரியா, சூப்பர் மற்றும் டி.ஏ.பி., ஆகிய உரங்கள் விவசாயிகளுக்கு தேவைபடுகிறது. இவை தனியார் உரக்கடைகள் மற்றும் அரசு வேளாண் கிடங்குகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கும் நிலை உள்ளது.
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஒன்றிய வேளாண் அலுவலங்கள் மூலம் மானிய விலையில் உரங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior