உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 05, 2010

30 லட்சம் கார்களை உற்பத்தி செய்து ஹுன்டாய் தொழிற்சாலை சாதனை


ஹுன்டாய் தொழிற்சாலை உற்பத்தி செய்த 30 லட்சமாவது காரை அறிமுகப்படுத்தும் தொழிற்சாலையின் முதல் நிர்வாக இயக்குநர் எச்.டபிள்யு. பார்க் (இடது), விற்பனைப் பிரிவு
 
              ஹுன்டாய் தொழிற்சாலை 12 ஆண்டுகளில் 30 லட்சம் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. 30 லட்சமாவது காரை அறிமுகப்படுத்தும் விழா ஆலை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.   
 
                ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் 1996ம் ஆண்டு ஹுன்டாய் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. 1998-ல் உற்பத்தியை தொடங்கியது. இத் தொழிற்சாலையில்  பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்க கூடிய சான்ட்ரோ, ஆக்ஸன்ட், வெர்ணா, வெர்ணா டிரான்ஸ்பார்மர், சோனாடா, ஐ 10, ஐ 20 கார்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தியை தொடங்கிய 12 ஆண்டுகளில் 30 லட்சம் கார்களை உற்பத்தி செய்து இந்நிறுவனம் சாதனை படைத்துள்ளது.  விழாவுக்கு ஹுன்டாய் தொழிற்சாலையின் விற்பனை பிரிவு துணைத் தலைவர் அரவிந்த் சக்சேனா தலைமை தாங்கினார். ஹுன்டாய் தொழிற்சாலையின் நிர்வாக இயக்குநர் எச்.டபிள்யு.பார்க் 30 லட்சமாவது காரை அறிமுகப்படுத்தி பேசினார். ஹுன்டாய் தொழிற்சாலை இந்தியாவில் கார் உற்பத்தியில் 2-வது இடத்தில் இருப்பதாகவும், இதில் 48 சதவீதம் கார்கள் 113 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், 52 சதவீத கார்கள் உள்நாட்டிலேயே விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். இவ் விழாவில் உற்பத்தி பிரிவு துணைத் தலைவர் சேதுராமன், உற்பத்தி பிரிவு உதவி துணைத் தலைவர் சாரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior