உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 07, 2010

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

விருத்தாசலம்: 

               கல்லூரிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கக் கோரி விருத்தாசலத்தில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 

               விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் மாணவ, மாணவிகள் ஜங்ஷன் ரோடு வழியாக ஊர்வலமாக சென்று ஆர்.டி.ஓ., முருகேசனிடம் மனு கொடுத்தனர்.மனுவில் கல்லூரிக்குச் சொந்தமாக 45 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் நாச்சியார் பேட்டை அருகில் சுமார் 35 பேர் கல்லூரி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசித்து வருகின்றனர். எனவே அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கல்லூரி இடத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். மாணவர்களிடம் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ., உறுதியளித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior