உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 07, 2010

குடிநீர் இணைப்பு வைப்புத் தொகை : சிதம்பரம் நகரமன்ற கூட்டத்தில் பரபரப்பு

சிதம்பரம்: 

              சிதம்பரம் நகர மன்ற கூட்டத்தில் தி.மு.க., கூட் டணிக் கட்சியினர் சேர் மனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற் பட்டது. 

               சிதம்பரம் நகர மன்ற கூட்டம் சேர்மன் பவுஜியா பேகம் தலைமையில் நடந்தது. ஆணையர் (பொறுப்பு) மாரியப்பன் முன் னிலை வகித்தார். அதிகாரிகள் கவுன்சிலர்கள் பங் கேற்றனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

சேர்மன்: 

               சிதம்பரம் நகராட்சியில் குடிநீர் பற் றாக்குறையைப் போக்க 718. 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு நிதியாக 615.60 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தேவைப்படும் 102.62 லட்சம் ரூபாயில், 50 லட் சம் ரூபாய் நகராட்சி நிதியிலும், மீதித் தொகையை வீட்டு உபயோக குடிநீர் இணைப்பில் டெபாசிட் தொகையை உயர்த்த உறுப் பினர்கள் அனுமதிக்க வேண்டும்.

ஜேம்ஸ் விஜயராகவன் (தி.மு.க): 

             குடிநீர் பிரச்னை தொடர்பாக அரசாணை வெளியிட்டு 10 மாதங்கள் கடந்தும் எந்த நடவடிக் கையும் மேற்கொள்ளாத நிலையில் இத்திட்டம் நிறைவேற்ற நகராட்சி பங்களிப்பு தொகை 164.18 லட்சம் ரூபாயினை மக்கள் மீது திணிக்க வேண்டிய நிலையில் உள்ளது. கடந்த 4 ஆண்டில் தொலை நோக்கு சிந்தனையோடு செயல்பட்டிருந் தால் நகராட்சி நிதியில் இருந்து செலுத்தியிருக்கலாம். சேர்மன் செயலை கண்டித்தும், நகராட்சி திட்ட தீர்மானங்களை நகராட்சி மண்டல இயக்குனர் தலைமையில் நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி தி.மு.க., கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர். 

            10 நிமிடத்திற்கு பின் மீண்டும் உள்ளே வந்து இனி வரும் கூட்டங்களை நகராட்சியின் மண்டல இயக்குனர் தலைமையில் நடத்த மினிட் புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றனர் .உடன் சேர்மன், கோரம் இல்லாததால் கூட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்துச் சென்றார். ஆனால் கவுன்சிலர்கள் சேர்மன் அறைக்குச் சென்று தரையில் அமர்ந்து ஒரு மணி நேரம் முற்றுகையிட்டு பின்னர் கலைந்து சென்றனர். இதனால் நகரமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior